tamilnadu

img

வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு பிரதம கேரள விருது

திருவனந்தபுரம், டிச. 1- கேஎஸ்கேடியு மாத இதழான ‘கர்ஷக தொழிலாளி’ (விவசாய தொழிலாளி)-  யின் ‘பிரதம கேரள’ விருதை கேரள முன்னாள் முதல்வர் விஎஸ் அச்சுதானந்த னுக்கு வழங்குவதாக கர்ஷக தொழி லாளி மாத இதழின் மேலாளர் ஆனாவூர்  நாகப்பன் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.  இம்மாதம் 5 ஆம் தேதி அய்யன்காளி மண்டபத்தில், ஒரு லட்சம் ரூபாய், கேடயம், பாராட்டு சான்றிதழ் அடங்கிய விருதை, முதல்வர் பினராயி விஜயன் வழங்குகிறார். இது தவிர கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்கு ரூ.40,001  கேடயம், பாராட்டு சான்றிதழ் அடங்கிய இலக்கிய விருதுகள்  வழங்கப்பட உள்ளன. கவிதைக்கு பிரபாவர்மா, கதைக்கு அசோக சாருவில், கட்டுரைக்கு வி.கார்த்திகேயன் நாயர் ஆகியோர் வெற்றி யாளர்களைத் தேர்வு செய்ய நடுவர் குழுவின் தலைவராக இருந்தனர். செய்தியாளர் சந்திப்பில் கேஎஸ்டியு மாநில செயலாளர் என்.சந்திரன், பொருளாளர் சி.பி.தேவதர்ஷன், இதழ் ஆசிரியர் பிரீஜித்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.