tamilnadu

பிப்ரவரி வேலை நிறுத்தத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு

சென்னை, டிச. 30- ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பிப்ரவரி மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்ததில் பங்கேற்க உள்ள தாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலா ளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங் களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன், தேச  நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி  மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 150க்கும்  மேற்பட்ட ஊழியர் அமைப்புக்கள் அறிவித் துள்ள 2022 பிப்ரவரி 23, 24 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக இந்தியப்  பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித் துள்ளதால்,ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அந்த போராட்டத்தில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளோம்.

கல்வி மேலாண்மைத் தகவல் தொகுப்பு  முறையின் கீழ் தலைமை ஆசிரியர்கள் அள வுக்கு அதிகமாக தேவையற்ற முறையில் தினசரி பதிவுகள் மேற்கொள்ள நிர்ப்பந்திக் கப்படுவதோடு, அளவுக்கு அதிகமான பதிவேடுகள் பராமரிக்க கல்வித்துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஆசிரியர்களின் அன்றாடக் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதோடு, ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். இதைக் கல்வித்துறை கைவிட வேண்டும். ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந் தாய்வை உடனடியாக நடத்துவதோடு, நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்க ளில் மாற்றியமைக்கப்பட்ட ஒன்றியங்களில் வேறு ஒன்றியங்களுக்குச் சென்ற ஆசிரியர்க ளின் முன்னுரிமை, பதவி உயர்வு பாதிக்காத வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய பழைய பள்ளிக்குச் செல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் பொதுமாறுதல் கலந் தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்ப தைக் கைவிட்டு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஒப்பந்தகாரர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்க ளுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.