tamilnadu

அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் இடையீட்டு மனுத் தாக்கல்

சென்னை, பிப்.26- அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில், அரசின் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அர்ச்சகர் என்பது சாதி சார்பற்ற பதவி, அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது, முறையான பயிற்சி உள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கோரியுள்ளனர். தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும் உச்சநீதி மன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா சாதியைச் சேர்ந்த வர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதி மன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்ற வர்கள் கருதினர். இந்நிலையில் ஆகமம் மற்றும் மந்திர பயிற்சிக்கு தேர்வு நடத்தி சான்றுகள் வழங்கிய நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை கார ணம் காட்டி பணி நியமனம் வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.