tamilnadu

உலகச் செய்திகள்

தனது அதிகாரபூர்வ சீனப் பயணத்தை அர்ஜெண்டி னாவின் ஜனாதிபதி ஆல்பர்ட்டோ பெர்னா ண்டஸ் துவக்கியுள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிகஸ் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மாவோவின் நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்குச் செல்கிறார். துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் வழங்கப் பட்ட சிறப்பு மதிய உணவு விருந்திலும் கலந்து கொண்டார்.

செயல்படக்கூடிய அரசு லெபனானில் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடு கள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கோரியுள்ளது. மே 25, 2022 அன்று தேர்தல் நடத்தப்போவதாக லெப னான் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல் வெளிப்படை யானதாகவும், நேர்மையாகவும் நடத்தப்படவேண்டும் என்று பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறு த்தினர். 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அவசரமாகத் தயாரிக்குமாறும் அனைத்து உறுப்பு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளன.

எத்தியோப்பியாவின் தலைநகர் அட்டிஸ் அபாபாவில் ஆப்பிரிக்க யூனியனின் உச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் வளர்ச்சி மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றி ஆப்பிரிக்க யூனியன் விவாதித்து வருகிறது. சூடான், மாலி, கினியா மற்றும் பர்கினா பசோ ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்தும் பேசுகிறார்கள். கடந்த ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த உச்சிமாநாடு நடைபெறவில்லை.