செங்கல்பட்டு, மே 14- செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தடுப்பூசி ஆலையை நடத்த முடியா விடில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தி யுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுமின் நிலையம், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் ஆகிய வற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெள்ளியன்று (மே 12) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன செயல்பாடுகள், உற்பத்தி, அங்கு பணியாற்றுகின்ற பணியாளரின் நிலைமை குறித்து கலந்து பேசுவதற் காக மே மாதம் 12 ஆம் தேதி வருவ தாக உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்திருந்தேன். இருப்பினும் அதிகாரிகள் சிலர் தில்லி செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டனர். இது குறித்து துறை சார்ந்த அமைச்சரிடம் புகார் அளிக்க இருக்கின்றேன். கல்பாக்கம் அணுமின் நிலை யத்தை பொறுத்தவரையில் நான்கு பகுதிகளாக செயல்பட்டு வருகின்றது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அணுமின் திட்டம் என்ற முறையில் துவங்கப் பட்டு 22 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் ஆராய்ச்சி என்ற நிலையில் இருப்பது சரியல்ல. ஆகவே இப்பிரச் சனையில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும்.
நிர்வாகத்திற்கு பொறுப்பு
தனியார் மயம் காரணமாக நிரந்தர பணியாளர்கள் நிலையும் தற்போது கேள்விக்குறியாக மாறி யுள்ளது. ஒப்பந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுக்கப்படுகிறது. இதை மீறி கேள்வி கேட்டால் மறுநாள் முதல் வேலை மறுக்கப்படுகிறது. இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டால் இதற்கு மேல் எங்களால் தலையிட முடியாது என்று தெரிவிக்கின்றனர். நிர்வாகத்தின் அனுமதியுடன் தான் இந்த ஒப்பந்ததாரர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரை பணிக்கு எடுக்கிறார்கள். நிர்வாகம் சொல்லும் பணியை தான் ஒப்பந்த தாரர் செய்கிறார். ஆகவே இப் பிரச்சி னையில் நிர்வாகத்திற்கும் பொறுப் புள்ளது.
மீண்டும் வருவேன்
ஒப்பந்த பணியாளருக்கு சம்பளம் வழங்கப்பட்டதா, அவர்களுக்கு நிரந் தர பணி வழங்கப்படுகிறதா என்று நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். தற்போது உயர் அதிகாரிகள் வெளி யில் சென்றிருப்பதால் மீண்டும் ஒருமுறை வந்து ஆய்வு செய்வதாக தெரிவித்து விட்டு வந்துள்ளேன்.
தொழிலாளர் சொசைட்டியை அங்கீகரித்திடுக!
கல்பாக்கம் அணு மின்நிலை யத்தைப் பொறுத்தவரையில் அதிகாரிகளின் உறவினர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அமைப்பாக சேர்ந்து சொசைட்டி என்ற முறையில் செயல் பட்டு வரும் நிலையில் அந்த சொசைட்டிக்கு ஒப்பந்தத்தில் 60 விழுக்காடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த பணிகளை சொசைட்டியில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் செய்வார்கள். அவர்களுக்கு உரிய சம்பளத்தை நிர்வாகம் வழங்க வேண்டும். அந்த வகையில் தொழிலாளர்கள் ஏற்படுத்திய சொசைட்டியை அங்கீ கரிக்க வேண்டும் என்ற வகையில் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். செங்கல்பட்டு அடுத்த மேலேறிப்பாக் கத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ. 800 கோடி செலவில் மக்கள் பணத் தில் அமைக்கப்பட்ட ஒன்றிய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பயன்படுத் தியிருந்தால் இந்திய நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்க முடியும். ஒன்றிய அரசை பொருத்த வரையில் தனியார் துறையை பலப்படுத்துவதற்காக மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இந்த பொதுத்துறை நிறுவனத்தை பலவீனப் படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனத்திற்கு எந்தவித உதவியும் செய்யாமல் உள்ளது. இந்த நிலையில் தான் மாநில அரசு தற்போது இந்த நிறுவனத் திற்கு வெறி நாய்க் கடி தடுப்பூசி தயாரிப் பதற்கான ஆர்டரை கொடுத்துள்ள தாக தெரிகின்றது.. இந்த நிறுவ னத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றால் ஆராய்ச்சியாளர் களை பணிக்கு எடுப்பதும், அதற்கேற்ப தொழிலாளர்களை பணிக்கு எடுப்பதும் அவசியம். கூடுதலாக நிதி ஒதுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசினால் நடத்த முடிய வில்லை என்றால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை மாநில அரசு எடுத்துக் கொள்கின்றோம் என்று திமுக அரசு தெரிவித்து விட்டது. ஒன்றிய அரசு இந்த நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால் மாநில அரசிடம் கொடுத்து விட வேண்டி யது தானே. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் அமைந்திருக்கும் இடம் தமிழ்நாட்டு மக்களுடையது. பொதுத் துறை நிறுவனத்திற்கு என்று இடம் கேட்டதால் தமிழ்நாடு அரசு இடத்தை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு சொந்தமான இடம் என்பதால் நீங்கள் அதை எங்களிடம் ஒப்படைத்து விட்டால் தாங்கள் நடத்திக் கொள்கி்றோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் டி.கே. ரங்கராஜன் மாநிலங் களவை உறுப்பினராக இருந்த போது கேட்டார். நானும் மக்களவை உறுப்பினர் என்ற வகையில் இந்த நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து உரிய துறைகளுக்கு கடிதம் எழுத உள்ளேன்.
பெண் தொழிலாளர் உரிமையை பறிப்பதா?
எச்பிஎல் நிறுவனத்தில் பெண் தொழிலாளர்கள் பணி செய்து வரு கின்றனர்.அவர்களுக்கான பிரசவ கால விடுப்பை கூட இந்த நிறுவன ம் வழங்காமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறு வனத்தில் பெண் தொழிலாளர்களை நடத்தும் விதத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. இந்த மருந்து தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை பாதுகாக்கும் பொறுப்பு என்பது இப்பகுதி பொது மக்களைச் சார்ந்ததாகும். இந்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவ னத்தை மாநில அரசே ஏற்று நடத்த ஒன்றிய அரசிடம் வலுவாக முறை யிடவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இதற்கான பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும். இப் பிரச்சனையை நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து எழுப்புவேம். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகநயினார், மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இ.சங்கர், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, மாவட்டச் செயலாளர் க.பகத்சிங்தாஸ், மாவட்ட துணைத் தலைவர் கே.பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பேட்டியின் போது உடனிருந்தனர்.