விசைத்தறித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், மே 28- நகைக்கடன் குறித்த புதிய அறி விப்பை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நகைக்கடன் பெறுவதில் பல் வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த விதி முறைகளானது ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையிலும், நகைக்கடன் பெற முடியாத நிலை யையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனியார் நகை அடகு கடை களை ஊக்குவிக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையிலும் ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள 9 புதிய விதிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலி யுறுத்தி, சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் நான்கு ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் உதவிச்செயலாளர் அங்கமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.அசோ கன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். இதில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விசைத்தறித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.