சென்னை, மே 14- பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்த தற்காகவும், கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப் படாமல் இருந்த ஆசிரியர்களுக்கான அலகு விட்டு அலகு மாறுதல் இந்த ஆண்டு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்திட ஆவண செய்ததற்காகவும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பிரபாகரன், தலை மையிடச் செயலாளர் எ.இராவணன், மேனாள் தலைமையிடச் செயலாளர் குலாம் தஸ்தகீர், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் அ.மாயவன் ஆகியோர் சனிக்கிழமை (மே 14) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது கடந்த கலந்தாய்வின் போது கூடுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு மாறு தல் பெற்றவர்களில் 3000க்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரி யர்கள் ஊதியம் பெற முடியாமல் இருக்கின்ற னர். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மே 31 வரை பொதுத் தேர்வு, ஜூன் 17 வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் இருக்கும் நிலையில் உடனடியாக பள்ளிகளைத் திறப் பது என்பது சரியான முடிவாக இருக்காது என்பதால் ஆசிரியர்கள் மன அழுத்தம் இன்றிப் பணியாற்ற ஏதுவாக பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் பரிசீலித்து உரிய முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இச்சந்திப்பின் போது சென்னை மாவட்டத் தலைவர் மணிவண்ணன், செயலாளர் கண்ணன், கலாராணி, அண்ணாமலை ஆகி யோர் உடனிருந்தனர்.