tamilnadu

img

காலநிலை மாற்றத்தால் அழியும் கடற்பறவைகள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

போர்ட்லேண்டு ஆரிகன். புவி வெப்பமயமாதல் கடற்பறவைகளின் எண்ணிக்கையில் கணிசமான அழிவை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாதகமான சூழ்நிலை, இனப்பெருக்கம்செய்யும் திறனற்றுப்போதல், சூடு, உணவுப் பற்றாக்குறை ஆகியவை கடற்பறவைகளின் எண்ணிக்கையில் குறைவை ஏற்படுத்துகிறது.

அழிந்துபோன ஆல்பெட்ராஸ்

காலநிலை மாற்றம் ஹவாய்த்தீவுகளில் இருந்து ஆல்பெட்ராஸ் பறவைகளின் எண்ணிக் கையில் பெரும்பகுதியை அழித்துவிட்டது. மெயின் கடலோரப் பகுதியில் பப்பின்ஸ் (Puffins) பறவைகளை இது பெருமளவில் பாதித்  துள்ளது. கடல்நீர் மட்டம் உயர்வதால் பல சம யங்களில் கடற்பறவைகளால் கூடு கட்ட, குஞ்சு களை பராமரிக்க உகந்த சூழ்நிலை உருவாவ தில்லை. கடல் வெப்ப உயர்வால் உணவு என்பது  இவற்றிற்கு எட்டாக்கனியாகிறது.

ஆபத்தின் விளிம்பில் மூர் பறவைகள்

புவி வெப்பம் அதிகரிப்பதால் சில கடற்பறவை கள் கூட்ட மரணத்திற்கு ஆளாகின்றன. மேற்குக்  கரையோர அமெரிக்காவில் வாழும் ஓக் பறவை கள் குடும்பத்தைச் சேர்ந்த காமன் மூர் (Common Murres), காசின் ஓலேட் பறவைகள் பூமியின் சூடு  தாங்காமல் கூட்டமாக உயிரிழந்தன. உணவு  கிடைப்பதில் ஏற்படும் குறைவு, கடற்கரையோரம்  அடிக்கடி உருவாகும் புயற்க்காற்றுகள் போன்  றவை கடற்பறவைகளின் இனப்பெருக்கத்திறனை யும் பாதிக்கிறது. இன அழிவை சந்திக்கும் ரோசெட்டா டேன்ஸ்  பறவைகளின் இனப்பெருக்கத்திறனில் காணப் படும் குறைவு இவை விரைவில் பூமியில் இருந்தே  அழியும் ஆபத்தை ஏற்படுத்தியுள்லது. உயரும் புவி வெப்பம் கடற்பறவைகள் கூடு கட்டுவதில் பெரும் பாதிப்பை ஏர்படுத்துகிறது என்று யு எஸ் மீன் வள மற்றும் வன உயிரியல் சேவைகள் (U S fish&wildlife services)அமைப்பின் உயிரியல் விஞ்ஞானி லிண்டா வெல்ச் கூறுகிறார். காலநிலை மாற்றம் மூலம் கடற்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் குறைவை மதிப்பிடுவது அசாத்தியமானது என்று லிண்டா கூறுகிறார். என்றாலும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்க லைக்கழகத்தின் ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்  திய ஒரு ஆய்வு கடற்பறவைகளின் எண்ணிக்கை யில் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 70 சத விகிதமாகக் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டு கிறது. கடந்த அரை நூற்றாண்டாக கடற்பறவை களின் இனப்பெருக்கம் பலநேரங்களில் உரிய அளவில் நடைபெறுவதில்லை. குறிப்பாக இது பூமத்தியரேகைக்கு வட பகுதி யில் வாழும் பறவைகளில் அதிகம் காணப்படு கிறது என்று சயன்ஸ் ஜெர்னல் இதழில் வெளி யிடப்பட்ட ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. சில இடங்க ளில் மீன் வளத்தில் ஏற்படும் குறைவு பெங்குயின்  குஞ்சுகளுக்கு உணவு தேடுவதில் சிரமங்களை உண்டாக்குகிறது.

கடற்பறவைகளை  வேட்டையாடும் புவியின் வெப்பம்

கடந்த ஐம்பதாண்டுகளில் காலநிலை சீரழி வின் மூலம் ஏற்படும் வெப்பத்தால் 90% பாதிக்கப்  படுவதும் கடல்வாழ் உயிரினங்களே. கடல் சூடு  அதிகரிப்பது பறவைகள் உணவு தேடுவதில் தடை யாக அமைகிறது. இதன் பலனாக ஆயிரக்கணக் கான கடற்பறவைகள் பட்டினி கிடந்து உயிரி ழக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் 1991ம் ஆண் டிற்குப் பிறகு பெங்குயின்களின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாகக் குறைந்துவிட்டது. ப்ளாங்டன் எனப்படும் தாவர மிதவை உயிரி கள் மற்றும் வடபகுதி நீர்நிலைகளில் காணப்படும்  சிறிய மீன்கள் கிடைப்பதில் ஏற்படும் தட்டுப்பாடு இப்பறவைகள் எதிர்கொள்ளவேண்டியுள்ள மற்றொருப் பிரச்சனை. பசுபிக் பெருங்கடலில் இத்தகைய மீன்கள் குறைந்துபோனது சமீப காலங்களில் பல்லாயிரக்கணக்கான காசின்ஸ் ஓலேட்டு பறவைகள் அழியக்காரணமானது. மீன்கள் குறைவாகக் கிடைத்ததால் மட்டும் இல்லாமல் அடிக்கடி ஏற்பட்ட புயல்களால் அட்  லாண்டிக்கின் மேற்குக் கரையோரங்களில் 2010ல் 8000 காமன் மூர் பறவைகள் அழிந்தன.  பலநேரங்களில் கடற்பறவைகள் உணவு தேடி  தொலைதூரங்களுக்குச் செல்லவேண்டியுள்ளது. இந்த சமயங்களில் கூட்டில் குஞ்சுகள் மட்டுமே  இருக்கும். இவ்வாறு தனியாக இருக்கும் குஞ்சு களை மற்ற விலங்குகள் வேட்டையாடிக் கொல் கின்றன என்று பிரிட்டன் லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன. உலகில் மற்ற கடற்பகுதிகளைக் காட்டிலும் அட்லாண்டிக் பகுதியே வெப்ப உயர்வால் அதிகம் பாதிக் கப்படுகிறது. அட்லாண்டிக் பகுதியின் அடை யாளச்சின்னமாகக் கருதப்படும் பப்பின் பறவை கள் கூடு கட்டும் மெயின் வளைகுடா பகுதி யில் இருக்கும் சிறிய தீவுகளில் இவற்றின் எண்ணிக்கைப் பெருமளவு குறைந்துள்லது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை குறைக்க மனிதன் உடனடியாக செயலில் இறங்கா விட்டால் அதனால் முதலில் அழியப்போவது அவ னாகத்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.