tamilnadu

img

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய ஆட்சியர்

மாமல்லபுரம்,ஜன.16- தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா மாமல்லபுரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட சுற்று லாத்துறை சார்பில் பொங்கல் விழா கானத்தூர் அருகே தனியார் கலை,  கலாச்சார மையத்தில் நடை பெற்றது.  மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். மாமல்ல புரம் சுற்றுலா அலுவலர் சக்தி வேல், மக்கள் தொடர்பு அலுவலர்  ஜெயா உள்ளிட்டோர் வரவேற்றனர். விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து  கொண்டனர். அவர்கள் மண்பானை யில் பொங்கல் வைத்தனர். விழாவில் கரகம் ஆடுதல், உறிய டித்தல்,கும்மியடித்தல், மாட்டுவண்டி பயணம் உள்ளிட்ட விளையாட்டுகளும் நடத்த ப்பட்டன.இதில் பங்கேற்ற வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள்  நெகிழ்ச்சியடைந்தனர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற் றும், கண்டும் ரசித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலை யில் கரகம் வைத்து ஆடி அசத்தி னர். மேலும் அவர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து  கொண்டாடினார்.