சிவகங்கை, ஜன.13- சிவகங்கை மாவட்டம் மம்மரங்கப் பட்டியைச் சேர்ந்த 50 வயதான பழனி யம்மாள், தனது புடவைகளையும், பழைய வேஷ்டிகளையும் தனது வீட்டின் சுவராகப் பயன்படுத்தி வரு கிறார். தனக்கு வீடு கட்டுவதற்கு அரசின் உதவி செய்யும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். 2021-நவம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையில், அவரது வீட்டின் மண் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கணவர் இல்லாத தால் தன் மகனுடன் வசித்து வரு கிறார் பழனியம்மாள். பழனியம்மாள் தனது சோகத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவ ரிடம் பகிர்ந்துள்ளார். தொடர் மழையில் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதைய டுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டைப் பார்வையிட்டு தற்காலிக நிவா ரணமாக ரூ.2,000 கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் பழனியம்மாளைச் சந்தித்து அரசு விரைவில் உங்களுக்கு வீடு ஒதுக்கித் தரும். எனவே ரூ. 2,000 திருப்பிக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். பழனியம்மாளோ “எனது நிலை மிகவும் பரிதாபகரமானது, நான் எனது பழைய புடவைகளை தற்காலிக சுவராகப் பயன்படுத்தினேன், இந்த அதிகாரிகள் பணத்தைத் திருப்பித் தருமாறு என்னிடம் கேட்கிறார்கள். கொரோனா பரவலால வேலை கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. கடந்த மாதம் ரேஷன் கடை யில் கிடைத்த இலவச அரிசி தான் உள்ளது,’’ என்றார். இது தொடர்பாகக் கூறியுள்ள சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, பழனியம்மாளின் குறைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார். விரை வில், அவருக்கு ஒரு வீடு வழங்கப் படும். கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்கமாட்டோம் என்றார்.