tamilnadu

img

டிஎம்பி வங்கியில் பொங்கல் விழா

தூத்துக்குடி, ஜன. 11 தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல்  வங்கியின் தலைமை அலுவலகத்தில் செவ்வா யன்று பொங்கல் விழா, வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.  இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் கிராமிய கலைஞர்கள் பங்கு பெற்ற தமிழர்களின் பாரம்பரிய  நடனங்களான பரதநாட்டியம், பறையாட்டம், மயி லாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் சிலம்பாட்ட  கலைகள் நடைபெற்றன. விழா முடிவில் வங்கி யின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி  கிருஷ்ணன் கிராமிய கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். விழாவில், வங்கியின் பொதுமேலாளர்கள், துணைப் பொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில்  வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் பேசுகையில், “வங்கியின் ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த வேளையில் வங்கியும்,  வங்கியின் ஊழியர்களும் மற்றும் அவர்களது குடும்பமும் மென் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும். வங்கியின் ஊழியர்களுக்கும் மற்றும்  அவர்களது குடும்பத்தினர்களுக்கும் இந்நன்நா ளில் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன்” என்றார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடி யில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டி  வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழு வதிலும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங் களில் 511 கிளைகள், 12 மண்டல அலுவலகங் களின் மூலம் சுமார் ஐம்பது லட்சம் வாடிக்கையாளர் களுக்கு சேவை ஆற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.