tamilnadu

img

பொங்கல் விழா : களை கட்டியது மதுரை மாவட்டம்

தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (இன்று) உற்சாகமாக கொண்டப்படுகிறது. தைப்பொங்கல் என்றால் கரும்பும், ஜல்லிக்கட்டும் தான். தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும் மதுரை மாவட்டத்திற்கென அதில் தனிச்சிறப்பு உண்டு. உலகப்புகழ் பெற்றது என வர்ணிக்கப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில்  வருகிற 17-ஆம் தேதி தான் நடைபெறுகிறது. தவிர பொங்கலன்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், ஜன.15-ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டையொட்டி மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளை நடத்துவதில் மதுரை மாவட்டம் முழுக்கவனம் செலுத்தியுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக மாடுபிடி வீரா்கள் 2,001 போ், காளைகளின் உரிமையாளா்கள் 4,534 போ் இணையவழியில் முன்பதிவு செய்துள்ளனா்.  மாடுபிடிவீரர்கள், காளைகள் எண்ணிக்கை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள்: கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நிகழாண்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாடுபிடி வீரர்கள், காளைகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும், இரு தவணைகள் தடுப்பூசி செலுத்தியிருப்பது, கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஒவ்வொரு துறையினரும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. ஒரு காளை உரிமையாளருக்கு ஒரு மாடு என்றால் கூட 4,534 மாடுகள் களத்தில் இறங்கும். தணிக்கைக்குப் பின் குறைந்தது 4000 மாடுகள் களமிறங்கும். மூன்று நாட்களில் அனைத்துக்காளைகளையும் கொரோனா தொற்றுக் காலத்தில் களமிறக்க முடியாத சூழல் உள்ளது. இது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய அவனியாபுரம் ஐல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர், “அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், சிந்தாமணி, விரகனூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காளைகள் 50 சதவீதம் களமிறங்க வாய்ப்புள்ளது. மற்ற பகுதி காளைகளும் களமிறங்கும் என்றார்.  அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ்சேகர், தென்மண்டல ஐஜி டி.எஸ். அன்பு, மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் ஆகியோர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டு பணிகளைக் கவனித்து வருகின்றனர். சேவல் சண்டைக்கு தடை... அதே நேரத்தில் சேவல்சண்டைக்கு சென்னை உயர்நீதிமன்றக்கிளை தடைவிதித்துள்ளது. ஜனவரி 25-ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது எனக் கூறியுள்ளது.

சேவல் சண்டைக்கு தடை...

அதே நேரத்தில் சேவல்சண்டைக்கு சென்னை உயர்நீதிமன்றக்கிளை தடைவிதித்துள்ளது. ஜனவரி 25-ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது எனக் கூறியுள்ளது.