பொள்ளாச்சி வழக்கு: இன்று தீர்ப்பு
கோவை: பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பல பெண் களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோவில் பதிந்து, பணம் பறிப்பு மற்றும் மிரட்டல் விடுத்த சம்பவம் 2019 இல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் துணிச்சலுடன் கொடுத்த புகாரினால் இந்த கொடூ ரத்தை செய்த கும்பலை போலீசார் பிடித்தனர். இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணி வண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் 2016 முதல் 2018 வரை இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் மற்றும் வீடியோ பதிவு செய்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. 2019 முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலை யில், விசாரணை முடிவடைந்து, இதன் தீர்ப்பு செவ்வாயன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது.
வடகலை, தென்கலையினர் மோதல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரத ராஜபெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவின்போது வட கலை, தென்கலை பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கி வாய்த் தகரா றில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. இரு பிரிவினரி டையே சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு கலைந்து சென்றனர்.
10 லட்சம் பேருக்கு பட்டா
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை நேருஜி கலையரங்கத்தில் ரூ.7 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவி களை வழங்கி அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும்” என்றார்.
திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டர்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிரா மத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே திடீரென தரையி றங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்க ளில் அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. தஞ்சை விமானப்படை தளத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர், பயிற்சிக் காக வந்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
மருத்துவரிடம் நலம் விசாரிப்பு
சென்னை: பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் படுகாய மடைந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சுற்றுலாப் பயணியான தமிழக மருத்துவர் பர மேஸ்வரனை, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. எஸ்.விஜயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முத்தரசன் கோரிக்கை
சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்க சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும். பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் பற்றிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
2 மாணவர்கள் ரயில் மோதி பலி
சென்னை: சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து சென்ற 2 இளைஞர் கள் மீது எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணை யில், உயிரிழந்தவர்கள் பெரம்பலூர் முகமதுபட்டினம் பகுதி யைச் சேர்ந்த முகமது நபூல் (20), சபீர் அகமது(20) என்பதும், இவர்கள் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத் தில் கணினி பொறியியல் 4 ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது. ஆதம்பாக்கத்தில் விடுதியில் தங்கியிருந்தனர்.
சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர மே 12 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்புகளில் சேர மே 12 முதல் மே 31 ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். விருப்பம் உள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.