கொச்சி, மார்ச் 5 - தமிழகத்திலும் கேரளத்திலும் பாஜகவின் மக்கள் விரோத, மதவெறிக் கொள்கைகளை எதிர்க்கும் அரசியல் மற்றும் கலாச்சாரம் உள்ளது எனவும், இரு மாநிலங்களிலும் அரசியல்-நிர்வாக மட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தொடர்கிறது எனவும் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை வெளியீட்டு விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண் டார். இரு மாநிலங்களிலும் மதச்சார்பற்ற, ஜனரஞ்சக அரசியல் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் தேசாபிமானியுடன் பகிர்ந்து கொண்டதை அந்நாளிதழ் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ‘கொங்குநாடு’ என்கிற கருத்தை பாஜக விதைத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?.
பிரிவினையை நோக்கமாகக் கொண்டு கொங்குநாடு விவாதம் கிளப்பப்பட்டது. பெரும் பான்மை சமூகமே இலக்கு. தமிழ் மக்கள் மதவாதத்தை தோற்கடிப்பார்கள். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை என்னவென்றால், கொரோனா காலத்தில் ஒன்றிய அரசின் அலட்சி யத்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது, வேலையின்மை அதிகரித்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜிடிபி 10.5 சதவிகிதமாக இருந்தது. கொரோனாவுக்குப் பிறகு, இது ஏழு சதவிகிதமாக உள்ளது. ஒன்றிய அரசு மாநிலத்தின் பங்கை முறையாக வழங்காததால், நலத் திட்டங்களை செயல்படுத்துவது கடினமாகி உள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து கூட்டாட்சிக் கொள்கை களை மீறி வருகிறது. கேரளா மற்றும் தமிழகம் எழுப்பியுள்ள கவலைகளை நாட்டிலுள்ள பல முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது போன்ற பிரச்சனைகள் மற்றும் மாற்று வழிகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையீட்டிற்கு தமிழுலகம் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னேற் றம் எதிர்காலத்துக்கு நம்பிக்கையைத் தருமா?
நிச்சயமாக, சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிபிஐயும் திமுகவுடன் இணைந்து அமோக வெற்றி பெற்று திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் முன்னேற்றம் தொடர்வதையே காட்டு கிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி களில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. கோவை மாநகராட்சியில் அக்கட்சிக்கு இடங்கள் இல்லை. 2011 முதல் 21 வரையிலான அதிமுக ஆட்சி பாஜகவின் மதவெறி மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு அடிபணிந்து சென்றது.
‘ஜெய் பீம்’ திரைப்படம் கட்சியின் செயல்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா?
தமிழகத்தில் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக பல சமூகப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இது சமூக வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எனது கடலூர் மாவட்டத்தில் நடந்த காவல் கொலையை மையமாக கொண்டது ‘ஜெய் பீம்’ படத்தின் கருப்பொருள். அந்த பிரச்சனைக்கு எதிரான போராட்டத்தை கட்சி கையிலெடுத்தது, வழக்கறிஞர் சந்துரு வழக்கை ஏற்று நடத்தினார். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராட்டத்தை தொடர்ந்தவர்கள் நாங்கள். தீண்டாமைக்கு எதிராக கட்சி தொடர்ந்து போராடுகிறது. சாதி ஆணவக் கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர சிறப்புச் சட்டம் வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தி வருகிறது.