tamilnadu

img

அக். 2 மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளித்திடுக!

தமிழக டிஜிபிக்கு தலைவர்கள் நேரில் கடிதம்

சென்னை,செப்.30- அக்டோபர் 2  தேசத் தந்தை மகாத்மா  காந்தி பிறந்த நாளையொட்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை  சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழு வதும் நடைபெறவிருக்கும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத் திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி அக்கட்சியின் தலை வர்கள் கே. பாலகிருஷ்ணன், தொல். திருமாவளவன் எம்.பி. ஆகியோர் செப்டம்பர் 30 வெள்ளியன்று தமிழக காவல்துறை இயக்குநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஆகியோர் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளின் சார்பில் “சமூக நல்லி ணக்க மனிதச் சங்கிலி” நடத்திட திட்ட மிட்டு ஆங்காங்கே உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள் ளது. ஆனால் அனைத்து இடங்களி லும் இந்த மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் கொடுக்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மறு சீராய்வு மனுவில், பி.எப்.ஐ. அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வுத் துறையினர் ஆய்வு நடத்தியதையும், அதனைத் தொடர்ந்து  உபா சட்டத்தை பயன்படுத்தி அந்த அமைப்பு தடை செய்யப்பட்டதையும் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், மேலும் ஆர். எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தர வின்படி அனுமதியளித்தால் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை திரும்பப் பெற  வற்புறுத்தியதோடு, இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி அன்று சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடத்தவிருக்கும் மனிதச் சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மனிதச் சங்கிலி போராட்டத்தில்  ஈடு படும் அரசியல் கட்சிகளும், அமைப்பு களும் மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட, மத  நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்று மையைப் பாதுகாத்திடவும் அனுதின மும் போராடி வரும் அமைப்புகளாகும். எனவே, மதவாத அடிப்படையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளையும், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகளையும் ஒரே  நேர்கோட்டில் பார்ப்பது பொருத்த மற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, தாங்கள் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் மதச்சார்பற்ற, மதநல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகளின் சார்பில் அமைதியான முறையில் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மாலை 4  மணி யளவில் திட்டமிடப்பட்டிருக்கும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” இயக்கத் திற்கு அனுமதி அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இதனிடையே சிபிஐ (எம்), சிபிஐ,  விசிக சார்பில் அக்டோபர் 2 அன்று  நடைபெறவிருக்கும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனு மதி வழங்கிடக் கோரி செப்டம்பர் 30 வெள்ளியன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இந்த விபரத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.