tamilnadu

img

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை

இராமநாதபுரம்/மதுரை, அக்.30- சுதந்திரப் போராட்ட வீர ரும், சாதியப் பாகுபாட்டை எதிர்த்தவரும், குற்றப்பரம் பரை சட்டத்திற்கு எதிராகப் போராடியவருமான பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின்  115ஆவது பிறந்த தினம் மற்றும் 60-ஆவது நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் 1908-ஆம் ஆண்டு  அக்டோபர் 30 அன்று இராம நாதபுரம் மாவட்டம் பசும்  பொன்னில் பிறந்தார். பொது வாழ்வில் முஸ்லிம்கள் மீது  பற்றும் பாசமும் மிகுந்த மரி யாதையும் தந்து பழகினார். இவரது தாயார் மறைந்து விடவே, கமுதியில் வாழ்ந்த  ஆயிஷாபீவி அம்மாளிடம் வளர்ந்தார். இந்தியா -  பாகிஸ்தான் பிரிவினையின் போது தமிழக முஸ்லிம்கள், நம் தாய் தமிழகத்தை விட்டுப்  போகக்கூடாது என அன்புக்  கட்டளையிட்டார்.  முஸ்லிம் களை விமர்சித்தவர்களை கடுமையாக எதிர்த்தார்.  

1937 ஆம் ஆண்டு பிப்ர வரி மாதம் இராமநாதபுரம் தொகுதியில்  போட்டியிட் டார். இவரது அரசியல் வளர்ச்  சியைக் கண்டு பயந்துபோன ஆங்கிலேய அரசு  இவரை  எதிர்த்து  இராமநாதபுரம் மன் னரை நிறுத்தியது. அந்தத்  தேர்தலில் முத்துராமலிங் கத் தேவர் வெற்றி பெற்றார். 1946-ஆம் ஆண்டு நடை பெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முத்துராமலிங்கத் தேவர், போட்டியின்றித் தேர்ந்தெ டுக்கப்பட்டார். மதுரையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி யின் தலைவராகவும், 27  தொழிற்சங்கங்களின் தலை வராகவும் செயல்பட்டார்.

1963-ஆம் ஆண்டு அக்டோ பர் 30-ஆம் தேதி காலமானார். அவரது  115-ஆவது பிறந்த தினம் மற்றும்  60-ஆவது  நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில்  அமைச்சர்கள் துரைமுரு கன், கே.என்.நேரு, ஐ.பெரி யசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரி யகருப்பன், ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டா லின் ஆகியோரும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சி யர் ஜானி டாம் வர்கீஸ்,  இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங் கம், செ.முருகேசன், இராம. கரு.மாணிக்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மலர் தூவி மரி யாதை செலுத்தினர்.

மதுரை

மதுரை கோரிப்பாளை யத்தில் உள்ள அவரது உரு வச்சிலைக்கு அமைச்சர்  துரைமுருகன் உள்ளிட்ட தமி ழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன் மற்றும்  உள்ளாட்சி அமைப்பின் பிரதி நிதிகள் மரியாதை  செலுத்தி னர்.

மக்கள் பிரதிநிதிகள்

மதுரை கோரிப்பாளை யத்தில் உள்ள உருவச் சிலைக்கு  மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்க டேசன், துணைமேயர் தி.நாக ராஜன், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல்  உள்பட பலர்  மாலையணிவித்து மரி யாதை செலுத்தினர். பசும்பொன் மற்றும் மதுரை கோரிப்பாளையத் தில் உள்ள முத்துராமலிங் கத்தேவர் சிலைக்கு அதி முக, அமமுக உள்பட பல்  வேறு அரசியல் கட்சித் தலை வர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.