tamilnadu

சீமை கருவேல மரங்கள்: விரைவில் கொள்கை முடிவு

சென்னை, மார்ச் 16 - தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல  மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என  தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செய லாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தர விட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி  முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் புதனன்று (மார்ச் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கடந்த விசாரணையின் போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழ கத்தைச் சேர்ந்த இந்திய வனப்பணிகள் (ஐ.எப்.எஸ்) அதிகாரிகள் குழு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்க ளில் ஆய்வு செய்யச் சென்ற குழு அறிக்கை  அளித்துள்ளது என்று தெரிவித்தார். இந்த மாநிலங்களில், 50 ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம், சீமை கருவேல மரங்கள், இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தப்படுகிறது. இரண்டு மூன்று ஆண்டுகள் அப்பகுதியை கண்காணித்து, மீண்டும் சீமை கருவேல மரங்கள் வளராமல் ஒப்பந்ததாரர்கள் பார்த்துக்  கொள்கின்றனர். சீமை கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்களில் நாட்டு மரங்கள் நடப்படுகிறது. இதே நடைமுறையை பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வனத்துறை அதிகாரி கள் குழு அளித்த அறிக்கைகளை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைந்து கொள்கை முடிவெடுக்க உள்ளது.  எனவே, கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனை பதிவு  செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.