சின்னாளப்பட்டி, செப்.25- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றி யத்துக்கு உட்பட்ட அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயி லில் புரட்டாசி விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட் டங்கள், மாநிலங்களிலிருந்து பொதுமக்கள் ஏராளமா னோர் வந்திருந்தனர். ஊராட்சி நிர்வாகம் சார்பல் குடிநீர், கழிப்பிட வசதி செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர் மேலும் கோவிலுக்கு வந்தவர்களின் இரு சக்கர வாக னங்கள், நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு சென்றதால் இடையூறு ஏற்பட்டது. ஒரு காவலர் கூட அந்த இடத்தில் இல்லை.இதனால் ஏற்பட்ட போக்கு வரத்து நெரிசலால் பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகைய நேரங்களில் கூடுதல் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.ஆனால் மெத்தனமாக இருந்ததால் மக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவ திப்பட்டனர்.