கோயம்புத்தூர், மார்ச் 20- அரசியல் கட்சியின் தேர்தல் பரப்புரை க்கு மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி நிர்வாகத்தின் மீது கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கோவையில், பாஜகவின் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பங்கேற் றார். இந்த ரோடு ஷோவில் அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் பள்ளி மாணவர்கள், பள்ளி சீருடையில் பங்கேற்க வைக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்த நிலையில், தேர்தல் விதிமுறைக ளுக்கு புறம்பாக பரப்புரையில் பள்ளி மாணவர்களை பாஜக பயன்படுத்திய தாக, தலைமை தேர்தல் ஆணையத்தி டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’ நிகழ்விற்கு பள்ளி குழந்தை களை அழைந்து வந்த அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி நிர்வாகத்திற்கு, கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நோட்டீஸ் அனுப்பியி ருந்தார். மேலும் இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டு அந்த அறிக்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்க ளை ஆசிரியர்கள் அரசியல் கட்சியின் தேர்தல் பரப்புரை நிகழ்விற்கு அழைத்துச் சென்றதாக பள்ளி நிர்வாகத்தின் மீது. பிரிவு 75-ன்கீழ்(குழந்தைகள் நலச் சட்டம்) கோவை மாநகர காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோன்று, மோடியின் ‘ரோடு ஷோ’ நிகழ்வில் ஸ்ரீ சின்மயா வித்யா லயா தனியார் பள்ளி நிர்வாகமும், மாண வர்களை கடவுள் உருவ வேடம் அணிந்து காட்சிக்கு நிறுத்தி வைத்திருந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அந்த பள்ளியின் மீது தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலு வலகம் நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளது.