சென்னை, செப்.30- சென்னை எழும்பூரில் உள்ள பழைய தமிழ்நாடு காவல்துறை ஆணையர் அலுவலகம் புதுப்பிக் கப்பட்டு, தமிழ்நாடு போலீஸ் மியூசியம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. கடந்த 28.9.2021 அன்று இந்த பிரம்மாண்ட போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போலீஸ் மியூசியத்தை தினமும் ஏராளமானவர்கள் பார்வை யிட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட போலீஸ் மியூசியம் தற்போது 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, மியூசிய வளா கத்தில் கோலாகல விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு தபால் அட்டை-உறை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தலைமை தபால் துறை அதிகாரி சாருகேசி தபால் அட்டை-உறையை வெளியிட, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அவற்றை பெற்றுக்கொண்டார். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் காவல்துறை யினரின் பேண்டு வாத்திய குழுவி னரின் இன்னிசை மற்றும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும், போக்கு வரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நாடகமும் நடத்தப் பட்டது.