தேனி,நவ.25- ஆண்டிபட்டியில் அரசு மருத்துவமனை செவிலி யர் வீட்டிற்குள் பலத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே பாப்பம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(44). இவர் திண்டுக் கல்லில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலி யராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கள் திண்டுக்கலில் சுரேஷி டம் வசித்து வருகின்றனர். ஆண்டிபட்டி பாப்பம் மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் புதனன்று சுரேஷ் அவரது மனைவி செல்விக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்ததால் அவரது உறவினர்களிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
வீடு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் வந்து விசாரணை நடத்தினார். டிஎஸ்பி தங்க கிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசார ணையை தீவிரப்படுத்தி யுள்ளனர்.