சென்னை, மார்ச் 28- கார்கடலின் மீது கதிர் எழுந்து நிற்பதுபோல் போர்க்கொடி ஏந்தி புறப்படுக செந்தமிழர் - என்று 1953 ஆம் ஆண்டு மெட்ராஸ் எலக்ட்ரிக் டிராம்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை இப்படி அழகியலாக வர்க்க உணர் வோடு பாடியவர் கவிஞர் தமிழ்ஒளி. கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவை 2024-இல் சிறப்புற கொண்டா டுவதற்காக பத்தாண்டுக ளுக்கு முன்பு தொடங்கப் பட்ட கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு, கவிஞரின் 57 ஆவது நினைவு நாளை மார்ச் 29 (இன்று) மாலை 6 மணியளவில் சென்னை எம். ஜி.ஆர் நகர், வள்ளல்பாரி தெருவி லுள்ள சுந்தரம் பள்ளியில் நடத்துகிறது. நினைவுதின உரை, கவிதை வாசிப்பு என நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. நூற்றாண்டு விழாக்குழு வின் மதிப்புறு தலைவர் ஈரோடு தமிழன்பன், தலை வர் சிகரம் செந்தில்நா தன், செயலாளர் இரா.தெ.முத்து, பொருளாளர் வே.மணி,பேராசிரியர் இரா. காமராசு, பேராசிரியர் கோ. பழனி, பிரின்ஸ் கஜேந்திர பாபு, பிரளயன், மயிலை பாலு, போன்றோர் கொண்ட விழாக்குழு நினைவு தின நாளை நடத்திட ஏற்பாடு களை செய்து வருகின்றது. “தமிழ் ஆய்வுலகில் கவிஞர் தமிழ்ஒளி” தலைப்பி லான நினைவுதின உரையை சென்னை பல்கலைக்கழ கத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் ரேவதி பழனிச் சாமி நிகழ்த்துகிறார். கவிஞர் நா.வே.அருள் ஒருங்கிணைப்பில் முனை வர் மஞ்சுளா, ரத்திகா,முகம் இளமாறன், உதயை வீரை யன்,கணபதி இளங்கோ, ஏகாதசி பங்கேற்கும் கவிதை வாசிப்பு “தமிழ்ஒளி ஒரு கவி தைச்சூரியன்” என்ற தலைப் பில் நடக்க இருக்கிறது.