உதகை, ஏப்.9- முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டினார். புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50 ஆவது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டா டப்பட உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி ஞாயிறன்று பந்திப்பூர் புலிகள் காப்ப கத்திலிருந்து வாகனம் மூலம் முதுமலை வந்தார். அவரை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித், ஐஜி சுதாகர், எஸ்பி கி.பிரபாகர் ஆகியோர் வரவேற்றனர். இதன்பின், ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவ ணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், டி-23 புலியை உயிருடன் பிடித்த வேட்டை தடுப்பு காவலர் பன்டனை பாராட்டினார். பின்னர் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார். இதைத் தொடர்ந்து புலிகள் காப்பக திட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளு டன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, சுமார் 25 நிமிடங்கள் நிகழ்ச்சியை முடித்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக மசின குடி சென்றார். இதையடுத்து அவர் ஹெலி காப்டர் மூலம் மைசூர் புறப்பட்டு சென் றார்.