பூங்காவில் விளையாடு கண்ணே-அங்கே
பூத்திருக்கும் அழகுமலர்ப் பெண்ணே!
ஏங்கிமனம் பறித்திடவே எண்ணும்-அதை
ஏற்றுமலர்ப் பறிக்காதே பெண்ணே!
விளையாட சறுக்குமரம் இருக்கும்-மகிழ்ச்சி
விளையாடி சருக்குவதில் கிடைக்கும்!
அலைபோல ஊஞ்சலிலே ஆடு -அதில்
ஆடும்போது இன்பமெழப் பாடு!
சுற்றுகின்ற நாற்காலி இருக்கும்-அதில்
சுற்றும்போது தலைசுற்றிக் கிறுக்கும்!
பற்றிடவே தொங்குகுழாய் இருக்கும்-அதைப்
பற்றியெழ கையுடலும் வலுக்கும்!
கலைபேசும் சிலைபலவும் இருக்கும்-அந்தச்
கற்சிலையும் உனைக்கண்டால் சிரிக்கும்!
விளையாடப் பலபொருள்கள் இருக்கும்-அதில்
விளையாட மனத்திலின்பம் பெருக்கும்!
நடைப்பயிற்சி செய்யுமிடம் இருக்கும்-அதில்
நடந்துவர நோய்வராது தடுக்கும்!
உடலெடையைக் குறைத்துநலம் சேர்க்கும்-அது
உண்ணுகின்ற மருந்துகளைத் தடுக்கும்!