tamilnadu

img

பினராயி விஜயனுக்கு ‘அகவை 80’

பினராயி விஜயனுக்கு ‘அகவை 80’

பிரதமர் உட்பட தலைவர்கள் வாழ்த்து

திருவனந்தபுரம், மே 24- கேரள முதல் வர் பினராயி விஜ யனின் 80-ஆவது பிறந்தநாளை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். “கேரள முதல்வர் பினராயி விஜய னுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இடது சாரித் தலைவர் நீண்ட ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இறைவன் அவருக்கு நீண்ட, ஆரோக்கி யமான வாழ்க்கையை வாழ ஆசிர்வதிக்  கட்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி,  ‘எக்ஸ்’ பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட்டுள்ளார்.  “கேரள முதல்வர் பினராயி விஜய னுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கி றேன். இந்த நிகழ்வு மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும், வரவிருக்கும் ஆண்டு ஆரோ க்கியம் மற்றும் செழிப்புடன் நிறைந்த தாக இருக்கட்டும்” என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி வாழ்த்துப் பதிவிட்டுள்ளார். “முற்போக்கான நிர்வாகத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பும், கூட்டாட்சி மற்  றும் மதச்சார்பின்மைக்கான நம்மால்  பகிரப்பட்ட அர்ப்பணிப்பும், தமிழகத்திற் கும் கேரளத்திற்கும் இடையிலான உறவை  வலுப்படுத்துகிறது. நமது கலாச்சார உறவு களையும் பொதுவான இலக்குகளையும் கொண்டாடுவதில் நமது இரு மாநிலங்க ளும் ஒன்றாக நிற்கட்டும். ஆரோக்கிய மும் மகிழ்ச்சியும் நிறைந்த நீண்ட ஆயு ளைப்பெற வாழ்த்துகிறேன்” என்று தமிழ்  நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது  வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். “கேரளத்தின் வளர்ச்சியில் முக்கிய  பங்கு வகிக்கும் தலைவரின் சமரசமற்ற  பொதுச்சேவையும் உறுதிப்பாடும் வலி மையுடன் முன்னேற ஆரோக்கியத்து டன் உங்கள் பணி தொடரட்டும்” என்று  மக்கள் நீதி மய்யம் தலைவர் - நடிகர்  கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “கேரளத்தின் மரியாதைக்குரிய முதல்வர் பினராயி விஜயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று மலையாள  திரைக் கலைஞர் மோகன்லால் ,  வாழ்த்து தெரிவித்தார். மற்றொரு புகழ்  பெற்ற திரைக் கலைஞரான மம்முட்டி யும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுவாக, கம்யூனிஸ்டுகள் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை என்ற அடிப்படையில், கேரள முதல்வர் பின ராயி விஜயனும் கொண்டாட்டங்கள் எதி லும் ஈடுபடவில்லை. வழக்கம்போல அலு வலகப் பணிகளை மேற்கொண்டார். சனிக்கிழமை காலை முதல்வர் அலுவ லகத்திற்கு வந்த பினராயி விஜயன், ஒரு  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டார். பிற்பகலில் மூன்று அதிகா ரப்பூர்வ கூட்டங்களிலும் பங்கேற்றார்.