tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருத்துறைப்பூண்டி, மார்ச்.6- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் மார்ச் 3-ஆம் தேதி வியாழனன்று நள்ளிரவு திருத்துறைப்பூண்டி சிபிஎம் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சமூக விரோதி கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளியை கைது செய்யாமல் காவல்துறை உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் வசிப்பவர் சிபிஎம் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன். இவரின் துணைவியார் ராம லோகஈஸ்வரி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருத்துறைப்பூண்டி நகர மன்ற 11-ஆவது வார்டில் வேட்பாள ராக சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிட்டு நகர்மன்ற கவுன்சிலராக வெற்றி பெற்றுள் ளார்.

இந்நிலையில், மார்ச் 2-ஆம் தேதி  திருத்துறைபூண்டி நகர மன்ற கவுன்சில ராக தோழர் ராம லோகேஸ்வரி பொறுப் பேற்றுக்கொண்டார். மேலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட பேச்சு வார்த்தைக் குழு அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தமிழகம் முழுவதும் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை அடிப்படையில் திமுக தலைமைக் கழக அறிவிப்பின்படி, திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர் வேட்பாளராக மார்ச் 3-ஆம் தேதி சிபிஎம் கவுன்சிலர் ராம லோகஈஸ்வரி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் வீட்டில் மார்ச் 3ஆம் தேதி நள்ளிரவில் மர்ம  நபர்களால் பெட்ரோல் குண்டுவீசப் பட்டுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வந்து பெட்ரோல் குண்டு வீசிய பகுதிகளை ஆய்வு செய்து நடைபெற்ற சம்பவத்தை விசாரித்த சென்றுள்ளனர். வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கா மல் சமூக விரோதிகளை கைது செய்யா தது கடும் கண்டனத்துக்குரியது, காவல்துறை யின் இந்த நடவடிக்கை சமூக விரோதிகளை மேலும் ஊக்குவிக்கும் செயலாக மாறும். எனவே, காவல்துறை புகாரை அலட்சி யப்படுத்தாமல் துரிதமாக விசாரணை செய்து இந்த கொடும் செயலை செய்த உண்மையான குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  இவ்வாறு அந்த கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.