tamilnadu

img

விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி மாநில அரசிடம் மனு

விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி மாநில அரசிடம் மனு

மாங்காய் விலை வீழ்ச்சி

சென்னை, ஜூன் 13 - மாங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், தேசிய கூட்டுறவு வங்கி கழகம் (NCCF) கொள்முதல் நெல்லுக்கான நிலுவைத் தொகையை வழங்கவும், கூட்டுறவு கடன் பெறுவதற்கான சிபில் கட்டுப்பாட்டை ரத்து செய்யவும் கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வெள்ளியன்று தமிழ் நாடு அரசிடம் மனு அளித்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், மாநில  பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தலை மையில், திண்டுக்கல் மாவட்டச் செயலா ளர் எம்.ராமசாமி, தருமபுரி மாவட்டச் செய லாளர் சோலை அர்ஜுனன், கிருஷ்ணகிரி  மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், வேலூர் மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன் ஆகியோர் சென்னை தலைமைச் செய லகத்தில் வேளாண்மைத்துறை முதன்மை  செயலாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தற்போது ஒரு கிலோ மாங்காய் வெறும் நான்கு ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி வருவதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், சேலம்,  திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங் களில் மா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. ஒரு டன் தோத்தாபுரி மாங்காய் அறு வடை செய்வதற்கு மட்டும் கூலி உட்பட  ஐயாயிரம் ரூபாய் செலவாகும் நிலையில்,  விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மாநி லத்தில் மா விவசாயிகளில் பெரும்பாலா னோர் சிறு விவசாயிகள் என்பது குறிப் பிடத்தக்கது. விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப் பட்ட மனுவில், “ஒரு கிலோ தோத்தாபுரி மாங்காய்க்கு குறைந்தபட்சம் 12 ரூபாய்  கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வும், ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபாய் ஊக்கத்  தொகை வழங்கவும் கோரப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் ஏற்கனவே மாங்காய் விவசாயிகளுக்கு ஊக்கத்  தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. திருவண்ணாமலை, விழுப்பும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய கூட்டு றவு வங்கி கழகம் (NCCF) ஏஜெண்ட்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் லுக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை நிலுவையில் உள்ளதாக சங்கம்  குற்றம் சாட்டியுள்ளது. இதனால் விவசாயி கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் அவசி யம் எனக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையை ரத்து செய்யவும் சங்கம் கோரியுள்ளது. இந்த விதிமுறையால் பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்று சங்கம் எச்சரித்துள்ளது. விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் உறுதியளித் தார்.