தொழிலாளர் ஊதிய பிரச்சனை
நாகர்கோவில், ஜூலை 10- அரசு ரப்பர் கழக நிர்வாகம் 108 நாட்களாக தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசு ரப்பர் கழக அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனு அனுப்பியுள்ளது. அந்த மனுவில், அரசு ரப்பர் கழக தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஒரு குழு அமைப்பதாக அரசு தெரி வித்துள்ளது. அரசு அறிவிப்பைத் தொடர்ந்து 2020 மார்ச் 24ஆம் தேதி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப் பட்டது .மத்திய அரசு, கொரோனா கால ஊதியத்தை வழங்க அர சாணையை பிறப்பித்தது. நிர்வா கத்திடம் அதையெல்லாம் தெரி வித்து ஊதியம் வழங்க வலியு றுத்தப்பட்டும் நிர்வாகம் வேலை யும் வழங்கவில்லை, ஊதியமும் வழங்கவில்லை. 2020 மார்ச் 25 ஆம் தேதி முதல் இன்றுவரை 108 நாட்களாக தொழிலாளர்கள் ஊதி யம் கூட கிடைக்காமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மார்ச் 25 ஆம்தேதி முதல் தொழி லாளர்கள் வேலைக்கு தயார் என்று தெரிவித்தும் வேலை வழங்கவில்லை. அரசை தொட ர்ந்து வலியுறுத்திய பிறகு மே மாதம் 18ஆம் தேதி முதல் வேலைக்கு அரசு அனுமதித்தது.
அரசு ரப்பர் கழகம் 12 நாட்கள் மட்டுமே மே மாதத்தில் வேலை யை வழங்கி விட்டு அந்த ஊதி யத்தில் நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக தொகை பிடித்தம் செய் தார்கள். இந்த நிலையில் ஜூன் மாதத்தி லும் தொழிலாளர்கள் வறுமை யில் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்ட நிலையிலும் வேலை செய்தார்கள். ஜூலை மாதம் ஆறாம் தேதி தொழிலாளர் துறையில் (நாகர் கோவில்) பேச்சுவார்த்தை நடை பெறும் பொழுது ஊதியத்தை ஜூலை 7ஆம் தேதி பட்டுவாடா செய்வதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பஞ்சப்படி பாக்கியும் வழங்குவதாக தெரி விக்கப்பட்டது. ஆனால் ஜூலை பத்தாம் தேதி வரை நிர்வாகம் வேலை செய்த தொழிலாளர் களுக்கு வேலை செய்த காலத் தின் ஊதியத்தை வழங்காமல் பொருளாதார குற்றத்திலும் ஈடு பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் மீது கடுமை யான கோபத்தோடு நிர்வாகம் செயல்படுகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் 25 முதல் வேலைக்கு தயார் என்று கூறிய பின்பும் அரசு ரப்பர் கழக நிர்வாகம் தான் தொழி லாளர்களை வேலைக்கு அனும திக்கவில்லை. ஆனால் இப்பொ ழுது ஜூன் மாத சம்பளம் வழங்க வில்லை .
தொடர்ச்சியாக தொழிலாளர் களை பழிவாங்கும் நோக்கில் நிர் வாகம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.ஏழாம் தேதி வழங் கும் ஊதியம் மாற்றம் என்பது எங்கேயும் தெரிவிக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் அரசு ரப்பர் கழகத்தில் தவறுகளை செய்யும் அதிகாரிகள் பாதுகாப்பாக இரு ந்து கொண்டு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டி ருக்கிறார்கள். அரசு ரப்பர் கழகத்தின் அதி காரிகளுக்கு ஏற்கனவே ஊதி யத்தை வழங்கிவிட்டு தொழிலா ளர்களுக்கு இதுவரை ஊதி யத்தை வழங்கவில்லை. சனி மற் றும் ஞாயிறு விடுப்பு காலம் என்ப தோடு வங்கிகளும் செயல்படாது. வங்கிகளில் தொகையை நிர்வாகம் செலுத்தினாலும் பெற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்கள் கடுமை யான மன உளைச்சலில் ஆளாகி தவித்து கொண்டு இருக்கும் நிலையில்தான் தொழிலாளர்கள் ஊதியத்திற்காக காத்திருக்கும் நிலையை அரசு ரப்பர் கழக நிர்வா கம் ஏற்படுத்தி இருக்கிறது. தொட ர்ந்து அரசு ரப்பர் கழகம் தொழிலா ளர்களை வாட்டி வதைக்கும் நிலையைத்தான் எடுத்து வருகி றது. ஆகவே தமிழக அரசும் மற் றும் மாவட்ட நிர்வாகமும் தொழி லாளர்களிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் அரசு ரப்பர் கழக அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.