tamilnadu

img

பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

தருமபுரி, அக்.22- வாச்சாத்தி கிராமத்தில் நடந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி யிடம் மலைவாழ் மக்கள் சங்க தலை வர்கள் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி  கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் சேவை மையம் சார்பில் ஞாயி றன்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இந்த முகாமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான எஸ்.வைத்தியநாதன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான பி.டில்லிபாபு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதனிடம் வழங்கினார்.

அம்மனுவில், கடந்த 1992 ஆம் ஆண்டு சந்தனக்கட்டை தேடுதல் வேட்டை என்று சொல்லி வாச்சாத்தி கிராமத்தில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் - பாலியல் வன்குற்றச் சம்பவத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட  போராட்டம் நடத்தியது. அதன்விளைவாக சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகளின் தண்டனையை உறுதிப்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும், கிராமத்தின் பழங்குடி மக்களுக்கும், தீர்ப்பில் உள்ளபடி நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், வாச்சாத்தியில் 112 பேரு க்கு அரசு வழங்கும் வீடு, அரசு ஆரம்ப  சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலு வலகம் அமைத்து தர வேண்டும். இக்கிராமத்தில் சாலை, மயானம், அரசு ஆரம்பப்பள்ளி உள்ளிட்ட அடிப்ப டை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், அரூர் வட்டச் செய லாளர் பி.குமார், பாப்பிரெட்பட்டி வட்டச் செயலாளர் தி.வ.தனுசன், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச்செயலாளர் கண்ணகி, மாவட்டச் செயலாளர் கே. என்.மல்லையன், மாவட்ட தலைவர் அம்புரோஸ், பொறுப்பாளர் எஸ்.கே. கோவிந்தன் ஆகியோர்உடனிருந்தனர்.