ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளுக்கு எதிராக, மோடி அரசின் புதிய தாராளமயக் கொள்கைக்கு மாற்றாக, 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ நாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மாநில அளவிலான “பெருந்திரள் அமர்வு” சென்னையில் நடைபெறுகிறது. அதனை விளக்கி டிஆர்இயூ சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா, டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன், பொதுச்செயலாளர் வி.அரிலால், ஆர்.இளங்கோவன், பேபி ஷகிலா ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) பொதுச் செயலாளர் பா.ராஜாராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.