tamilnadu

பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கவில்லை !

சென்னை, ஜன.22- உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்  படவில்லை என சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக தலைமைச் செயலாளர் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலை யின் பீடத்தை அகலப்படுத்தி, அனு மதியின்றி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்  நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்ப ட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள், பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செய லாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழகச் தலைமைச் செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த  பதில் மனுவில், ’உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலைகள் அமைக்க  அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்ப ங்களை பல்வேறு துறைகளின் ஆய்வுக்கு உட்படுத்தி, முதல்வரின் உத்தரவைப் பெற்று வருவாய் துறை இறுதி உத்த ரவை பிறப்பிக்கும் வகையில் கடந்த 2017- ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு ள்ளது. இந்த அரசாணையின் அடிப்படை யில், அரசு நிலங்கள், நீர்நிலைகள், சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப் படாமல் சிலைகள் அமைக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  வருவாய் துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டே சிலைகள் அமைக்க அனு மதியளிக்கப்படுகிறது. 

;