சென்னை, பிப். 3 - 45ஆவது சென்னை புத்தகக் காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி புத்தகக் காட்சியான பிப். 16ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) ஆண்டுதோறும் புத்தகக்காட்சி நடத்தி வருகிறது. 45ஆவது சென்னை புத்தகக்காட்சி ஜன.6 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் என அறிவித்தது. கொரோனா 3ஆவது அலை பரவல் காரணமாக புத்தகக் காட்சி நடத்த தமிழக அரசு தடை விதித்தது. தற்போது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, புத்தக்காட்சி நடத்த பாபசி, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட அரசு, நிபந்தனைகளோடு புத்தக்காட்சி நடத்த அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நிலையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி, காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து நாட்களிலும் புத்தக்காட்சியை நடத்த லாம். இணையதளம் மூலம் (ஆன்லைன்பேமண்ட்) நுழைவுக் கட்டணம் வசூலிக்கலாம். அரங்கிற்குள் ஒரே நேரத்தில் 3 வாசகர்களை மட்டுமே அனு மதிக்க வேண்டும்; வாசகர் 15 நிமிடம் மட்டுமே ஒரு அரங்கிற்குள் இருக்க லாம். அரங்கிற்குள் குளிர்சாதன வசதி செய்யக் கூடாது. அனைத்து வாயில்களிலும், அரங்குகளிலும் கிரிமி நாசினி திரவம் வைக்க வேண்டும், அரங்குகள் போதிய இடைவெளியுடன் அமைக்க வேண்டும், வாசகர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.