புதுக்கோட்டை, நவ.8 - புதுக்கோட்டை பழனி யப்பா முக்கம் அருகே ராணி யார் மகப்பேறு மருத்துவ மனை, அரசு உயர் தொடக்கப் பள்ளி, எல்ஐசி உள்ளிட்ட அரசு அலுவல கங்கள் உள்ளன. கூடுத லான பயணிகள் ஏறி-இறங் கும் பேருந்து நிறுத்த மும் இதன் அருகே உள்ளது. இதன் அருகிலேயே அரசு மதுபானக்கடையும் (டாஸ்மாக்) நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த கடையில் குடித்துவிட்டு வரு பவர்களால், கர்ப்பிணிகள், மாணவர்கள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மது அருந்தியவர்கள், அந்தப் பகுதி வழியாக செல் லும் பெண்களிடம் அத்துமீறு வதாகவும், அடிதடி, வெட்டு குத்து உள்ளிட்ட குற்றச் செயல்கள் அடிக்கடி அரங் கேறி வருவதாகவும் அப் பகுதி மக்கள் வேதனை தெரி வித்தனர். இதனால், டாஸ்மாக் கடையை மூட வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை இணைத்து பல கட்டங்களாக போராட் டங்களை நடத்தியுள்ளது. போராட்டம் நடத்தும் போதெல்லாம், வருவாய்த் துறையினர் கடையை மூட கால அவகாசம் கேட்பதும், பின்னர் கடையை மூடாமல் விட்டுவிடுவதும் தொடர் கதையாக இருந்து வந்தது.
பூட்டுப் போடும் போராட்டம்
மேற்படி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு அதிகாரிகள் எந்த நடவ டிக்கைகளும் எடுக்காததால் செவ்வாய்க்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு கட்சி யின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி. நாகராஜன், எஸ்.ஜனார்த்த னன், ஒன்றியச் செயலா ளர்கள் எல்.வடிவேல், எம்.ஆர்.சுப்பையா, டி.லட்சாதி பதி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் டி.சலோமி, எஸ்.பாண்டிச்செல்வி, டி.காயத்திரி, சி.மாரிக் கண்ணு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மாகாதீர், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சந்தோஷ், கட்சியின் நகரக் குழு உறுப்பினர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்கள், முன்னாள் முதலமைச்சர் கருணா நிதி, மகாகவி பாரதியார் ஆகியோரின் வேடங்கள் அணிந்த மாணவர்களோடு நகர்மன்ற வளாகத்தி லிருந்து டாஸ்மாக் கடையை நோக்கி பேரணி யாக சென்றனர். கடைக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தடைகளை அமைத்து போராட்டக்காரர் களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால், தடைகளை உடைத்துக் கொண்டு போராட்டக் காரர்கள் கடைக்கு முன்பாக குவிந்தனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடை பெற்றது.
தொடர்ந்து முழக்கங் களை எழுப்பியபடி முற்று கைப் போராட்டம் தொடர்ந் தது. மேலும், போராட்டத் தில் ஈடுபட்ட ஒரு பகுதி யினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடு பட்டனர். போராட்டக் காரர்களை கட்டுப்படுத்த முடியா மல் திணறிய போலீ சார் வேறு வழியின்றி வருவாய்த்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவி, திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், டாஸ்மாக் அதிகாரிகள் கடையை உட னடியாக மூடுவதாகவும், தற்போதே அங்குள்ள மது பாட்டில்களை அகற்று வதாகவும் உறுதிய ளித்தனர். இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. என்றாலும், அனுமதி யின்றி சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட் டோரை போலீசார் கைது செய்தனர்.