சென்னை,டிச.27- தந்தை பெரியார் சிலை தொடர்ந்து அவமதிக்கப்படும் பின்னணியில் உள்ள குற்றவாளிகள்மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறு த்தியிருக்கிறார். இதுகுறித்து வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பொன்னேரியில் தந்தை பெரியார் சிலையை கோழைத்தனமாக காலிகள் சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல், சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலையில் உள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் சிலைக்குப் ‘’புடவை மூலம் முக்காடு’’ போடப் பட்டது. வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி யில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப் பட்டபோதும், தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலையின் தலையில் செருப்பை வைத்த போதும். சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அவமானப்படுத்தப்பட்டபோதும்கூட மனநலம் சரியில்லாத ஆசாமி செய்ததாகக் கூறி, கோப்பை (ஃபைல்) முடித்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. ‘மனநலம் பாதிக்கப்பட்டவனுக்குப்’ பெரியார் சிலைதான் கண்ணுக்குத் தெரியும்போல் தெரிகிறது. பொன்னேரியில் பாஜகவின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சி யாக, தந்தை பெரியார் சிலையருகே ‘வெற்றி வேல் வீரவேல்!’ என்று எழுதப்பட்ட நோட்டீ சும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் காவல்துறையினர் கணக்கில் கொள்ள வேண்டும். சிலையை உடைப்பது, அவமதிப்பதன் பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் யார் என்பதுதான் முக்கியம். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளால் தந்தை பெரி யாரைச் சிறுமைப்படுத்த முடியாது.
முதலமைச்சர் கவனத்திற்கு...
அதேநேரத்தில், தந்தை பெரியார் சிலை களைக் குறி வைத்துத் தாக்கும் விஷமிகள் - விஷமிகளின் பின்னணியில் இருக்கக் கூடியவர்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் கவனம் செலுத்த வேண் டும். அனைத்து தலைவர்கள் சிலைகளுக்கும் அருகில் கேமிரா பொருத்தி, கூண்டுகளை அகற்றுவது அவசியம். இவ்வாறு வீரமணி தெரிவித்திருக்கிறார்.