ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது சென்னை, ஜன. 22 - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமான் கடந்த ஒரு மாத மாகவே பெரியார் பற்றி அவதூறாக பேசி வருகிறார். அவரின் இந்த கருத்து க்கு திமுக, சிபிஎம், விசிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி களும் பெரியாரிய இயக்கங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பெரியார் தொடர்பாக சீமான் பேசிய பேச்சு மற்றும் அவரின் அவதூறுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், சீமானை மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் புத னன்று (ஜன. 22) சீமான் வீட்டை முற்று கையிடும் போராட்டத்தை நடத்தினர். முன்னதாக, அறிவித்தபடி காலை 9 மணிக்கு, தபெதிக தலைவர் கு. ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் சீமான் வீடு அமைந் துள்ள சென்னை நீலாங்கரை பகு திக்கு வந்தனர். அவர்களுடன் ‘மே 17’, தந்தை பெரியார் திராவிடர் கழ கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமி ழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட அமைப்பு களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சீமானுக்கு எதிரான பதாகைகளுடன் குவிந்தனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து, அங்கு குவிந்திருந்த காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து பாலவாக்கத்தில் போராட்டக் காரர்களை தடுத்து நிறுத்தினர். இத னால், கோபமடைந்த போராட்டக் காரர்கள் சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். இதனிடையே, சீமான் வீட்டில் ஒரு கூட்டம் உருட்டுக் கட்டைகளு டன் திரண்டதும், அவர்களுக்கு சுடச்சுட பிரியாணி சமைத்து பரி மாறப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. “பெரி யாரா பிரபாகரனா என்று மோது வதாகிவிட்டது. இனி மோத வேண்டி யதுதான்” என்று சீமான் வழக்கம்போல மீண்டும் சலம்பியுள்ளார்.