அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா ?
தேனி, ஜூலை 19- பெரியகுளத்தை தொடர்ந்து சின்ன மனூரில் அதிமுக பிரமுகர் பெயரில் அரசு நிலம் முறைகேடாக பட்டா கொடுக்கப்பட்டுள்ளது .பெரியகுளத் தில் 182 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா வழங்கிய அப்போதைய பாளை யம் துணை வட்டாட்சியராக இருந்த கிருஷ்ணகுமார் பட்டா வழங்கியது தெரி யவந்துள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி 2 ஆவது வார்டு பொன்நகர் பகுதி சர்வே எண் 517 /-1 -இல் 1ஏக்கர் 96 சென்ட் நிலம்,அடிப்படை ஆவண மான, அ.பதிவேட்டின் படி ஓடை என வருவாய்த்துறையால் வகைப்படுத்தப் பட்டது. அது போல சர்வே எண் 517/2,3 ஆகிய நிலங்களில் 4 ஏக்கர் 61 சென்ட் நிலமும் ஓடை என வகைப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலத்தையும், இந்த நிலங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை ஆர்ஜி தம் செய்து பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு வீட்டு மனை வழங்குவ தற்கு அரிஜன நத்தம் என அரசு வகை மாற்றம் செய்து வருவாய் கணக்குகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பட்டி யல் இன மக்களுக்கு வீட்டு மனை கொடுத்த இடம் போக சர்வே எண் 517/1 -உள்ளிட்ட நிலங்கள் அப்படியே தரிசாக போடப்பட்டது. எஞ்சிய இந்த நிலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறைக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் அரிஜன நத்தம் என வருவாய்த் துறை கணக்கில் உள்ளது. இந்த நிலத்தின் அருகில் உள்ள நிலத்தில் புறம்போக்கில் தென்னை மரம் வைத்து ஆக்கிரமிப்பு செய்து, படிப்படி யாக இந்த அரசு நிலத்தையும் ஆக்கிர மிப்பு செய்கிறார்கள்.
முறைகேடாக பட்டா
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை பி -மெமோ பதிவு செய்து, படிப்படியாக ஆவணங் களை திருத்தி வருவாய் கணக்குகளில் நத்தம் என திருத்தி, செல்லப்பாண்டி மனைவி செல்வராணி, காளைத்தேவர் மனைவி பஞ்சம்மாள் பஞ்சவர்ணம், பேயாண்டி தேவர் மக்கள் பாண்டிய ராஜ், செல்லப்பாண்டியன், மகாராஜன், பாண்டிராஜன் மகன் தெய்வேந்திரன் ஆகியோர் பெயர்களில் ஆவணங்களை திருத்தி பட்டா மாறுதல் செய்யப்பட்டது.
மீண்டும் போலி ஆவணம்
மீண்டும் போலி ஆவணம் தயாரித்து பத்திரப் பதிவு செய்து, போலியை அச லாக்கி சர்வே எண் 517/1 -இல் உள்ள 1 ஏக்கர் 96 சென்ட் நிலத்தில் சுமார் 95 சென்ட் நிலத்தை அதிமுக நிர்வாகி கண்ணம்மா கார்டன் ராஜேந்திரன் பெய ரிலும், தமிழ்ச்செல்வன் மனைவி தீபா பெயரில் சுமார் 45 சென்ட் நிலத்தையும், மீதமுள்ள நிலத்தை நாகராஜன் மனைவி கிருபா நான்ஸி ஆகியோர் பெயருக்கு வருவாய்த் துறையினர் பட்டா வழங்கி யுள்ளனர். அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான நிலத்தை வருவாய்த்துறை யினர், வீடற்ற பட்டியல் இனத்தை சேர்ந்த மக்களுக்கு பட்டா வழங்காமல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு பட்டா கொடுத்துள் ளனர்.
சிபிஎம் போராட்டம் எதிரொலி
இந்நிலையில் அதிமுக நிர்வாகி கண் ணம்மா கார்டன் ராஜேந்திரன் அந்த இடத்தில் வீட்டுமனை பிரிவாக மாற்றி விற்பனை செய்ய திட்டமிட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பகுதி மக்களை திரட்டி குடியேறும் போராட்டம் நடத்தியது. அப்போது அரசு நிலத்தில் அனுமதியின்றி குடியேறும் நிகழ்வு நடக்கக் கூடாது எனவும் முறைப்படி விண்ணப்பம் செய்த பயனாளிகளை தேர்வு செய்து பட்டா வழங்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.
அதிகாரிகளை காப்பாற்ற காற்றில் விடப்பட்ட அரசாணை
இந்நிலையில் முறைகேடாக பட்டா வழங்கிய நிலையில் அதிகாரிகளை காப்பாற்றும் நடவடிக்கையில் வரு வாய்த்துறையினர் ஈடுபட்டு வருகிறார் கள். முறைகேடாக வழங்கிய பட்டாவை தற்போது முறைகேடாக நீக்கியுள்ளனர். அரசு நிலத்தை தனியார் பெயரில் மாற்றம் செய்யவும், தனியார் நிலத்தை அரசு பெயரில் மாற்றம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையர் உத்தரவு வழங்கி யுள்ளார். ஆணையரின் ஆணையை காற்றில் பறக்கவிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், சக அதிகாரிகளை காப் பாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் பட்டவை ரத்து செய் துள்ளனர்.
நடவடிக்கை பாயுமா?
அரசு ஆதிதிராவிடர் நலத்துறை யினர், பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டிய இடத்தை போலி ஆவணம் தயாரித்து, உடந்தை யாக இருந்து பட்டா மாறுதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போல அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் ஆட்சியர் அனு மதியின்றி பட்டா ரத்து செய்த அதிகாரி கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு வித்திட்டவர் பெரியகுளம் வட்டத்தில் அரசு நிலத்தை முறை கேடாக பட்டா வழங்கிய அதிகாரிகளில் முக்கியமானவர் கிருஷ்ணகுமார் என தெரியவந்துள்ளது.