tamilnadu

img

நேருவின் பெயரைக் கேட்டாலே அலறும் ஆர்எஸ்எஸ்

நாகர்கோவில், நவ.15- மக்களுக்கு மத உரிமை உண்டு,  ஆனால் அரசு அதிலிருந்து விலகி  இருக்க வேண்டும். இந்த அருமை யான கோட்பாட்டை மக்களுக்கு எடுத்துச் சொன்னதோடு அதை நடை முறைப்படுத்தியவர் நேரு. அதை அரசமைப்பு சாசன மாண்பாக கொண்டு வந்த நேருவின் பெயரைக் கேட்டாலே ஆர்எஸ்எஸ் அலறுகிறது என்று பேரா சிரியர் அருணன் கூறினார். நாகர்கோவிலில் திங்களன்று (நவ.14) மக்கள் ஒற்றுமை இயக்கம் நடத்திய குழந்தைகள் தின விழாவில் அவர் மேலும் பேசியதாவது: நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு 9 ஆண்டு கள் சிறை வாசம் இருந்தார். 1921 இல்  அவர் முதன்முதலாக சிறைக்கு சென்று  88 நாட்களை கழித்தார். 1942 இல் அவர்  கடைசியாக சிறைக்கு சென்றார். அப்போது தொடர்ந்து 1945 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து அவர் சிறையில் இருந்தார். 1946 இல் பிரதமரானார். 1947 இல் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். இப்படிப்பட்ட நேருவின் பெயரைக் கேட்டால் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு காதில் ஈயத்தை காய்ச்சு ஊற்றியது போலாகிவிடும். ஏனென்றால் அவர்கள் ஆங்கிலேயரின் காலை நக்கியவர்கள். அவர்களது காலணியை துடைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. ஒன்பது ஆண்டுகள் சிறை யில் இருந்தார் நேரு. ஒரு மன்னிப்பு கடிதம் எழுதியதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் போற்றும் சாவர்க்கர் 9 மன்னிப்பு கடிதம் எழுதினார்.

எட்டு ஆண்டுகளாக மோடி பிரதமர்.  அவர் மீது குற்றச்சாட்டுகள் வைத்தால்,  எல்லாவற்றுக்கும் காரணம் நேரு என்கிறார். 58 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நேருவா இன்றைக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம்? நேரு மீது இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் எழ காரணம் ஆர்எஸ்எஸ் முகத்திரையை கிழித்த வர் நேரு. இஸ்லாமியர்களும் கிறித்த வர்களும் இந்தியாவின் பூர்வகுடி மக்கள். அவர்கள் அன்னிய தேசத்தவர்கள் அல்ல. உங்கள் சாதிக் கொடுமை கண்டு மதம் மாறியவர்கள்.  இந்த நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து மதத்துடன் வந்தவர்கள் ஆரியர்கள். இதை சொன்னவர் ஜவஹர்லால் நேரு. இந்திய தரிசனம் என்கிற அற்புதமான படைப்பை தந்தவர் நேரு. அதில் அவர், சிந்து வெளி நாகரீகத்துக்கு பிறகு  ஆரியர்கள் இந்த பூமிக்கு வந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து வந்தார்கள் என்றும் கூறுகிறார். இந்த உண்மையை நேரு சொன்னதால்தான் அவர் மீது இவ்வளவு கோபம். விடுதலையின்போது பாகிஸ்தான் முஸ்லீம்நாடு என பிரகடனம் செய்தது தவறு என கூறிய ஆர்எஸ்எஸ் இந்தி யாவை இந்துநாடு என அறிவிக்கு மாறு வலியுறுத்தியது. பாகிஸ்தானின் பிரகடனம் தப்பு என்றால் அந்த தப்பை இந்தியா ஏன் செய்ய வேண்டும் என்று அப்போது நேரு கேட்டார். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றான் கோட்சே.  அடுத்த ஐந்தாவது நாள் ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்தார் பிரதமர் நேரு. அப்போது பிரதமர் என்கிற முறையில் அனைத்து முதல மைச்சர்களுக்கும் நேரு எழுதிய கடிதத்தில், இந்த நாட்டை இந்து ராஸ்ட்டிரமாக மாற்ற வேண்டும் என  நினைக்கிறவன்தான் இந்த நாட்டின்  மகத்தான இந்துவை கொலை செய்திருக்கிறான் என்று சுட்டிக்காட்டி னார். 1948-49 களில் அவர் தொடர்ந்து  முதல்வர்களுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதங்களில் எல்லாம் ஆர்எஸ் எஸ்ஸை அவர் தோலுரித்து காட்டு கிறார்.

ஆர்எஸ்எஸ் ஒரு பலாத்கார அமைப்பு. நாஜிகளை பின்பற்றுகிறது. ஆகவே, ஆர்எஸ்எஸ்ஸை ஒடுக்க வேண்டியது ஒரு ஜனநாயக நாட்டின் கடமை என்று முதல்வர்களுக்கு கடிதம் எழுதியவர் பிரதமர் நேரு. இந்த  நாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதில் துணிவும் உறுதியும் கொண்டிருந்தார் நேரு. மக்க ளுக்கு மத உரிமை உண்டு, ஆனால் அரசு அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். இந்த அருமையான கோட்பாட்டை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்கள், அதை நடைமுறைப் படுத்தியவர்கள், அதை அரசமைப்பு சாசன மாண்பாக கொண்டுவந்தவர்கள் நேருவும் அண்ணல் அம்பேத்கரும். அதனால்தான் இவர்களது பெயர் களைக் கேட்டாலே சங்பரிவாரத்தின ருக்கு கோபம் வருகிறது என்று கூறினார். மக்கள் ஒற்றுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தா.நாகராஜன் விழாவுக்கு தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செய லாளர் வன்னி அரசு, அருட்பணி மரிய  வின்சென்ட், மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் சட்டமன்ற உறுப்பி னர் ப.அப்துல் சமது உள்ளிட்டோர் பேசினர். பாலர் சங்கத்தைச் சேர்ந்த  சிறார் கலை நிகழ்ச்சியும்நடைபெற்றது.