tamilnadu

இடத்தை அளந்து காட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

இடத்தை அளந்து காட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பட்டா கிடைத்தும் இடம் கிடைக்கவில்லை?

கும்பகோணம், மே 26-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் பகுதியில் மாற்றுத்திறனாளி களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிடவும், கடந்த வருடம் வழங்கப்பட்ட பட்டாவிற்கான  இடத்தை அளந்து அடையாளம் காட்ட வேண்டியும், தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில், கும்பகோணம் வட்டாட்சி யரை சந்தித்து மனு வழங்கப்பட்டது.  அந்த மனுவில், தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் கும்பகோணம் கோட்ட மாற்றுத்திறனாளிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், கடந்த 3 ஆண்டு காலமாக வீட்டு  மனை பட்டா கேட்டு மனு கொடுத் திருக்கிறோம். இதில், சுமார் 48 பேர்களுக்கு கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வீட்டு மனை பட்டா கும்பகோணம் தாலுகா, சேஷம்பாடி கிராமத்தில் வழங்கப்பட்டது. ஆனால் மேற்படி இடம் அளந்து அடையாளம் காட்டாமல் இருந்து வருவதால் நாங்கள் எவ்வாறு பட்டா இடத்தை தெரிந்து வேலியிட்டு பாதுகாப்பது, வீடு கட்டி கொள்வது என தெரியாமல் கடந்த 6 மாதமாக இருந்து வருகிறோம். மேலும், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் வட்டம், பாபநாசம் வட்டம், ஆகிய பகுதிகளில் உள்ள, தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பங்களையும், பரிசீலணை செய்து தகுதியான அனைவருக்கும் அவரவர் பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்கவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.