காசர்கோடு, மார்ச் 24- சங்பரிவார் சக்திகளுக்கு முன் கேர ளம் மண்டியிடாது, எந்த சூழ்நிலையி லும் அமைதியாக இருக்காது. சங்பரிவா ரங்களின் வகுப்புவாத இலக்குகளுக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகளை மக்கள் முழுமையாக நம்புவதுதான் நாட்டின் தனித்துவம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு (சிஏஏ) எதிரான இரண்டாவது பேரணி யை மார்ச் 23 சனிக்கிழமையன்று காசர்கோடு மாவட்டம் காஞ்ஞாங் காட்டில் துவக்கி வைத்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:, குடி யுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியும் (எல்.டி.எஃப்) அதன் அரசும் முன்னணியில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்ன விலை கொடுத்தாலும் இந்தப் போராட்டம் தொடரும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவை முஸ்லிம் களின் சிவில் உரிமைகளைப் பறிக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவை இந்து நாடாக மாற்றும் சங் பரிவாரத்தின் செயல்திட்டத்தின் ஒரு பகுதி இது. குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம் களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குகிறது. இது வெறும் சட்டம் அல்ல. அடக்குமுறைக்கான கருவி. இங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அச்சத்தில் உள்ளனர். கவலையுடன் வாழ்கிறார்கள். அவர்களிடம் சொல்கி றோம். நீங்கள் தனியாக இல்லை. கேரளம் உங்களுடன் உள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது கேரளம். அன்று அது ஒற்றைக்குரலாக இருந்தது. ஆனால் பின்னர் அனைவரும் அதை எடுத்துக் கொண்டனர். இந்தியாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம். பாஜக அல்லாத முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட் டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனைவரையும் ஒன்றா கப் பார்க்கும் கேரள கலாச்சாரத்தின் ஒரு பகுதி இது. இவ்வாறு முதல்வர் பேசினார்.