மேட்டுபாளையம், டிச. 19- மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதி களில் இயங்கி வரும் கல் குவாரிகளால் கடும் பாதிப்பை கிராம மக்கள் சந்தித்து வருகின் றனர். இந்நிலையில், புதிதாக மேலும் ஐந்து கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைய டிவார கிராமங்களில் கடந்த பல ஆண்டு களாக பத்திற்கும் மேற்பட்ட கல்குவா ரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரி களால் விவசாயத்தை மட்டுமே வாழ்வா தாரமாக கொண்டுள்ள இக்கிராமங்கள் கடு மையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இக்குவாரிகள் எதுவுமே சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதில்லை என்கிற குற்றச் சாட்டு உள்ளது. விதிகளுக்கு புறம்பாக அதிக ஆழத்தில் இயந்திரங்களின் உதவியோடு துளையிடப்படுகின்றன. மிக சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் மூலம் வெடிகள் வைத்து மலையடிவார கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர் பாதிக் கப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தை மட் டுமே நம்பியுள்ள தங்களால் விவசாயமே செய்ய இயலாத நிலை உருவாகியுள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும், இரவு பகல் என எந்த நேரத்திலும் பாறை களை தகர்த்தெறியும் தொடர் வெடிகளால் நில அதிர்வு பூமியில் அதிர்ச்சி ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. வீடுகளின் சுவர்கள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு வருவதாக கூறு கின்றனர். மேலும், கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசுகள் விவசாய பயிர்கள் மீது படிந்து அவை கருகி விடுவதோடு தங்க ளுக்கும் சுவாச கோளாறுகள், இருதய பாதிப்பு போன்றவற்றால் அவதியுற்று வரு வதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பல முறை தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனுக் கள் கொடுத்ததும் இதுவரை பலனில்லை என்பதோடு விதிகளை மீறி இயங்கி வரும் கல்குவாரிகளில் ஆய்வு நடத்துவதோ நடவ டிக்கை எடுப்பதோ இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். காரமடை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட பெள்ளாதி, சிக்காரம் பாளையம் கிராமங்களில் ஏற்கனவே இயங்கி வரும் கல்குவாரிகளை மூட இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது வரும் நிலையில், இதே பகுதிகளில் மேலும் புதிதாக ஐந்து கல்குவா ரிகள் அமைக்க தனியார் சிலரால் அனுமதி கோரப்பட்டு அதற்கு லைசென்ஸ் கொடுப்ப தற்கான முதற்கட்ட பணிகள் அதிகாரிகள் தரப்பில் துவக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதி மக்களின் வெந்த புண்ணில் வேல் விட்டு பாய்ச்சுவது போல் அமைந்து விட்டது. இதனால் ஆவேசம டைந்த பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு
மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் தேரம் பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். ஆண்கள், பெண்கள் என ஐநூற்றுக் கும் மேற்பட்டோர் ஆவேசத்துடன் நடத்திய சாலை மறியலை கைவிட வைக்க காவல் துறை மற்றும் வருவாய்துறை சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக் கவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்திற் கும் மேல் கிராம மக்கள் சாலையில் அமர்ந்த படி கல்குவாரிகளுக்கு எதிராக முழக்க மிட்டபடி இருந்ததால் இப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இறுதியாக போலீ சார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மறிய லில் ஈடுபட்டோரை கைது செய்ய போலீசார் முயன்ற போது இரு தரப்பினரிடையே வாக் குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியது. மக்களிடம் அதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சு வார்த்தையை அடுத்து மறியலில் ஈடு பட்டோர் சாலையில் இருந்து நகர்ந்து வாக னங்கள் செல்ல அனுமதித்தனர். புதிய கல்கு வாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது, சட்ட விதிகளை மதிக்காமல் காரமடை ஒன்றி யத்திற்கு உட்பட்ட மலையடிவார கிராமங் களில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவற்றை மூட வேண்டும் என்ற இரு கோரிக்கைகள் ஏற்க படாத பட்சத்தில் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள போராட்டம் தொ டரும் என உறுதியுடன் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.