tamilnadu

img

விவசாயிகள் - தொழிலாளர்கள் நடைபயணம்

ஒன்றிய பாஜக அரசின் விவசாய விரோத - தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களின் முத்தாய்ப்பாக ஏப்ரல் 5 அன்று தலைநகர் தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்கும் - நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் விதமாகவும் அப்பேரணியின் கோரிக்கைகளை விளக்கியும் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியு, விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கங்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 26 ஞாயிறன்று 16 மையங்களில் நடைபயணம் நடைபெற்றது. இராஜபாளையம் ஒன்றியம் தேவதானத்தில் இப்பயணத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், நடைபயணத்தில் பங்கேற்றார்.