பளாரென்று அறை விழுந்தது முத்துக்
கருப்பசாமிக்கு. தூரத்திலிருந்து பையன் அழுகிற பக்கமாக ஆவேசத்தோடு ஓடிவந்த முனியப்பன் அய்யர் கோபத்தில் திட்டிக் கொண்டே போவதைப் பார்த்து அமைதியாகிவிட்டான்.
அப்ப்பா. அடிச்சுட்டாருப்பா அவரு.
நீ என்னடா பண்ணுன, ஒரு எடத்துல சும்மா
இருக்க மாட்ட.
எப்போதும் தன் மீது கோபப்படாத, எவர்
குற்றம் சொல்லியும் தன் பக்கம் நின்று வாதாடு
கிற அப்பா, சட்டென்று கண் முன்னால் தொலைந்து போவதைப் பார்த்தபடியே முகம் தொங்கிப் போனது முத்துவிற்கு.
சாமிய சுத்தி வந்தப்போ தெரியாம அவரை
இடிச்சுட்டேன்பா, அதுக்குப் போயி அடிச்சுட்டாரு.
காரணம் தெரியாமல் பெற்றுக் கொள்கிற தண்டனையை ஒருபோதும் குழந்தைகளால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு
குழந்தையும் தன் செய்கையில் தவறேது
மில்லை, அதற்கான தண்டனை நியாயமற்றது என்றுணரும் தருவாயில் அவர்களால் ஆதங்
கத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடிவ
தில்லை. அதுவும் எப்போதும் தன் கட்சியான அப்பாவை இழந்த குழந்தை சும்மா இருந்துவிடுமா?
அப்ப்பா வலிக்கிதுப்பா, வாப்பா வீட்டுக்குப்
போலாம். இங்க இனிமே நாம வரவே கூடாது.
தன் குழந்தையின் மீதான சிறு வன்முறை
யும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாத முனி
யப்பனால் அய்யர் தன் பையனை அடித்த பின்பு கோபம் வற்றிவிட்டதை எண்ணி தனக்குத்
தானே வெட்கிக் கொண்டான். தான் அடிவாங்கி
யது ஏனென்று குழந்தைக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காலங்காலமாக பழக்கப்பட்டுப் போன முனியப்பனுக்குத் தெரியாமல் இருக்குமா
உன்னோட அழுக்கு அவங்களோட ஒடம்
புல பட்டதுனால கோபமாயிடுப்பாங்க, அவங்க
சாமிக்கு அபிஷேகம் பண்றவங்க இல்லியா. அதனால தான் சட்டுனு கோபம் வந்திடுச்சு.
அப்போ எனக்கு கோபம் வராதா. எனக்கும்
இடிச்சதும் வலிச்சதுல, நானும் திருப்பி அடிக்க
எவ்ளோ நேரம் ஆகும்ப்பா?
அடித்தால் திருப்பி அடிக்கச் சொல்லி எந்தக்
கடவுளும் நமக்குச் சொல்லிக் கொடுக்க வில்லியே மனதிற்குள் நொந்து கொண்டார்.
இல்லப்பா சாமிக்கு அபிஷேகம் பண்ணுற
வங்க சுத்தபத்தமா இருக்கனும். நீ இடிச்சது
னால அவங்க உடம்புலயும் அழுக்கு ஒட்டி
யிருக்குமில்லியா. அதனாலதான் கோபம் வந்திருச்சு.
அப்போ என்னை கை நீட்டி அடிக்கும் போது
மட்டும் அந்த அழுக்கு ஒட்டாதா? நான் இடிச்சது
னால தான் அழுக்கு ஒட்டிருச்சா?
அது இல்லடா கண்ணா, அது கடவுள்
மேல இருக்கிற பக்தில தான் கோபப்பட்டிருப்
பாங்க. மத்தபடி அவங்களுக்கு சாமிதான எல்லாமே.
அது சரிப்பா, நான் தான் வீட்டுலயே குளிச்சிட்
டேனே. அதுவும் புதுசா தான ட்ரெஸ் போட்டு
வந்திருக்கேன். அப்புறம் எப்படி என் மேல அழுக்கு ஒட்டியிருக்கும். அதுவும் என் மேல அழுக்கு ஒட்டியிருக்குன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும்?
இது ஓடியாடி விளையாடியதாலோ, ஒடம்பு
அழுக்காயிறதாலோ வர்ற அழுக்கல்ல. பிறக்கும் போதே இந்த ஒடம்பு அழுக்கென்று சொல்லி வைத்திருக்கிற சம்பிரதாயம் என்று பையனிடம் சொல்ல அவனுக்கு வாய் வரவில்லை.
அதில்ல, நீதான் கோவிலுக்குள்ள ஓடியாடி
விளையாடுறேல்ல. அதைப் பாத்திருப்பாங்க. உள்ள வந்ததிலிருந்தே நீ ஒரு எடத்திலே ஒக்காரவே இல்லியே.
தன் பையன் பக்கம் நியாயம் இருந்தும்கூட,
ஏன் அய்யர் பக்கமே நியாயம் வலிந்து பேசிக்
கொண்டிருக்கிறோம் என்று முனியப்பனுக்கும் விளங்கவில்லை. இருந்தாலும் அய்யரை எதிர்த்துப் பேசவோ, பையனை பரிகாசம் செய்
யவோ முனியப்பன் துளியும் நினைக்க வில்லை.
அவரும் தான் நாம வந்ததிலேருந்து உள்ளே
யும் வெளியேயும் நடந்துகிட்டே இருக்காரு. அப்போ அவருக்கும் தான அந்த அழுக்கு ஒட்டி
யிருக்கும். ஏன் அந்த அழுக்கு எனக்கு ஒட்டாதாப்பா
அதில்லப்பா.
போப்பா, உன்கூட சண்டை. நீ அவருக்கே சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்கே.
அதில்லடா தங்கம். அவங்கல்லாம் பிறக்கும்
போதே சுத்தபத்தமா பொறந்தவங்க. இந்த அழுக்கெல்லாம் அவங்களை ஒண்ணும் பண்ணாது. நம்மள மாதிரி மனுசங்க, அழுக்கு தான் சுத்தமா சேராது. அவங்களையெல்லாம் கடவுள் அப்படித்தான் படைச்சிருக்காரு.
அப்போ நாமெல்லாம் பெறக்கும் போதே அழுக்காத்தான் பொறந்தோமாப்பா.
ஆமாப்பா.
முத்துவால் சமாதானம் ஆக முடியவில்லை.
அவனுக்கு கன்னம் இன்னும் விண்விண் னென்று வலித்துக் கொண்டிருந்தது.
அப்பா.. அப்பா, நான் போயி சாமியை தொட்டுக் கும்பிட்டு வரட்டுமா.
அச்சச்சோ.. அங்கல்லாம் போகக் கூடாதப்பா, உன்ன மாதிரி சின்ன பசங்களாம் போகக் கூடாது.
ஏன்பா, அப்போ சரி. நீ போயி தொட்டுக் கும்பிட்டு வா, நீ பெரிய ஆளு தானப்பா.
நானா.. அப்பாவும் போக முடியாதுப்பா.
ஏன்பா, நீ இன்னும் பெரிய ஆளா ஆவலியா.
அதில்லப்பா, பொறக்கும் போதே பெரிய ஆளா இருக்கனும்.
அப்பா, பொறக்கும் போது எல்லோரும் குட்டிப் பாப்பாவா தான இருக்க முடியும். அவங்க மட்டும் எப்படி பெரிய ஆளா இருக்க முடியும்?
அதில்லப்பா. அவங்க வழிவழியா சாமிக்கு
பூசை பண்ணுறவங்க. அப்படி அய்யரா பொறக்கும் போதே அவங்களுக்கு பெரிய ஆளு
பட்டம் கொடுத்துருவாங்க. அவங்க மட்டும் தான் உள்ள போயி சாமிய தொட்டுக் கும்பிட முடியும். நாம அவங்க தொட்டுக் கும்பிட்ட கையக்கூட தொட்டுக்கூட கும்பிட முடியாது. தீபத்தை தொட்டு கும்பிட முடியுமா அது மாதிரிதான் அவங்களையும் தொடக் கூடாது, சாமியவும் தொடக் கூடாது.
முத்துவுக்கு குழப்பமாகிவிட்டது.
அப்போ நம்ம கருப்பசாமியை போயி நான் தொட்டுக் கும்பிட்டேனே. சாமி என்ன ஒன்னுமே செய்யலே.
அது நம்ம சாமிப்பா, நம்மல எதுமே செய்யாது.
அப்படின்னா நம்ம சாமியை விட்டுட்டு எதுக்குப்ப அடுத்தவங்க சாமியை வந்து கும்பிடுற. சாமியாடித் தாத்தா விபூதி பூசுறப்போ
கொஞ்சம் வாயிலயும் தின்னத் தருவாரு. அவரு விபூதிய ஒடெம்பெல்லாம் தொட்டுப் பூசி
விடுவாரு. அவருல்லாம் இப்படி கோவமே படமாட்டாரு. பேசாம வாப்பா, நம்ம சாமி கிட்டயே போவோம்.
ம்ம்.. சரிப்பா
•••••