tamilnadu

img

குறுந்தொகைப் பாட்டில் பாடலிபுத்திரமும் சோணை நதியும் - முருகன்

எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில் ஒரு பாடலில், தனது தலைவன் வரவு பற்றிய செய்தியை கூறியதற்காக பாணனுக்கு ஒரு வெகுமதி தருவதாகச் சொல்கிறாள். பொதுவாக நாம் ஒரு நல்ல செய்தியைச் சொன்னால் சொன்னவர்க்கு ஏதாவது பரிசு கொடுப்போம் அல்லவா? அப்படி தன் காதல் தலைவன் பற்றிய நற்செய்திக்காக ஒரு நகரையே பாணனுக்குத் தருவதாகக் கூறுகிறாள். அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் அவள் தருவதாகச் சொன்ன ஊர் இன்றைய பீகார் தலைநகர் பாட்னா. அதாவது அதன் பழைய பெயர் பாடலிபுத்திரம். அதுதான் வியப்பு. அந்தக் குறுந்தொகை பாடல்:

நீகண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையின மொழிமோ
வெண்கோட்டி யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே         
 (குறுந்.75) நீ பார்த்தாயா? பார்த்தவர் கூறக் கேட்  டாயா? தெளிவாகச் சொல். யார் சொல்லிக் கேட்டாய், என் காதலர் வரவை. சொல். (அப்  படிச் சொன்னால்) சோணை நதிக் கரை யிலே பொன் மிகுதியால் சிறப்புற்று விளங்கும்  பாடலி எனும் வளமிக்க நகரத்தை நீ பெறு வாயாக என்று தலைமகன் வரவுணர்த்திய பாணனை நோக்கித் தலைமகள் கூறு கிறாள். அப்படி என்றால் இச்செய்யுள் இயற்றப் பட்ட காலத்தில் பாடலிபுத்திரம் வளம் சிறந்த  பெருநகரமாய் விளங்கியது புலனாகும் என்கி றார் பேராசிரியர் எஸ்.வையாபுரியார். தமது  ‘குறுந்தொகையின் காலம்’ எனும் கட்டு ரையில். அப்படி எனில் அதன் காலம் எது?  இந்த வினாவை எழுப்பி பாடலிபுத்திர நக ரத்தின் சரித்திரம் பற்றி நீண்ட ஆய்வுக் குறிப்பைத் தருகிறார். பாடலி என்பது முதலில் பிரபலமாகாத சிற்றூ ராக இருந்தது என்றும் அப்போது அதற்கு குஸூமபுரம் என்று பெயர் வழங்கியது என்றும்  சொல்லப்படுகிறது என்று கூறுகிறார். அஜாத சத்ரு (கி.மு. 500 முதல் கி.மு.475 வரை) வின்  பெயரன் உதயணன் கி.மு.450-இல் இதனை நகரமாக்குவதற்கு அடிகோலினான். மௌரிய வம்சத்தின் பேரரசரான அசோகர்  காலத்தில் தான் தலைநகராகக் கொள்ளப்பட் டது. இவரது ஆட்சிக் காலத்தில் (கி.மு.273 முதல் கி.மு.233 வரை) தமிழ் தேசங்கள் முதலியவற்றுக்கு முதன்முதலாக பௌத்த மதத்தைப் பரவச் செய்யும் பொருட்டு தூதர்கள் அனுப்பி ஆங்காங்கே பௌத்த பள்ளிகளை உருவாக்கியவர் என்பது வரலாற்றுச் செய்திதானே.  அதன்பிறகு சுங்க வம்சத்தினர், காண்வ வம்சத்தினர், ஆந்திர வம்சத்தினர் பின்னர் லிச்சவி வம்சத்தினர் வசம் பாடலிபுத்திரம் சென்றது. குப்த வம்சத்தினரின் சமுத்திர குப்தன் ஆட்சியிலிருந்து பாடலிபுத்திரம் புறக்கணிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியா வந்த சீன (யாத்ரீகர்) பயணி கி.பி.405- 411 வரை நல்ல நிலையில் இருந்தது என்றும் கி.பி.640-இல் இந்தியா வந்த சீனப் பயணி, அப்போது முற்றும் அழிந்துவிட்டது என்றும் கூறியிருப்பதாக பேரா.வையாபுரியார் விரி வாக எடுத்துரைக்கிறார்.

இத்தகைய வரலாறால் அசோகர் காலத் துக்குப் பின் கிறிஸ்துவ ஆண்டுகளின் ஆரம்ப  காலங்களில் பாடலி இருந்த நிலைமையை இந்த குறுந்தொகை பாடல் குறிப்பதாகக் கொள்ளலாம் என்றும், கி.பி.முதலாம் அல்லது  இரண்டாம் நூற்றாண்டு குறுந்தொகை பாடல்  கள் இயற்றப்பட்ட காலம் எனக் கருதுதல் தவறாகாது என்று நிர்ணயிக்கிறார். ஆயினும், பத்தொன்பதாம் நூற்றாண் டின் பிற்பகுதியில் லெப்டினண்ட் கர்னல் எல்.ஏ.வாட்டல் (Waddel), இன்றைய பாட்னா  பிரதேசத்தை அகழாய்வு செய்து பாடலி புத்திரம் அமைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தார். தமது ஆய்வு முடிவை 1892 இல் வெளியிட்டார். அதன் பிறகும் ஆய்வுகள் தொடர்ந்தன. அவற்றின் முடிவு குறித்து வி.ஏ. ஸ்மித், தமது இந்திய பண்டைய வரலாறு நூலில் பின்வருமாறு கூறியுள்ளார் என்று வையாபுரியார் குறிப்பிட்டுள்ளார். “கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் நிரூமிக்கப்  பட்டு பேரரசர்களது தலைநகராய் விளங்கிய  பாடலிபுத்திரமானது சோணை நதியின் வட கரையிலே, கங்கையின்றும் சில மைல்  தூரத்திலே, அவ்விரு நதிகளும் சங்க மித்த லால் உண்டான நீண்ட இடைப்பிரதேசத்தில் இப்பொழுது சுதேசியர் வாழ்ந்து வரும் பாட்னா என்னும் பெரிய நகரமும் பங்கிப்பூர் என்னும் ஆங்கிலேயர் வாழும் பகுதியும் இருக்கின்றன. ஆனால் இவ்விரண்டு நதிகளின் போக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன; பாட்னாவிலிருந்து 12 மைல் தூரத்தே உள்ள தினாப்பூர் என்  னும் இராணுவ ஸ்தலத்தின் அருகே அவை  சங்கமிக்கின்றன. தற்காலத்துள்ள நகருக்குக்  கீழாகப் புதையுண்டு கிடக்கிற புராதன நகரம், 9 மைல் நீளமும், 1.5 மைல் அகலமும் உள்ளதாய் நாற்கோண வடிவினதாய் அமைந்து இருந்தது. திண்ணிய மரம் கொண்டு உருவாக்கிய மதிலால் அரண்  செய்யப்பட்டு, 64 வாயில்களை உடைய தாய் 570 கோபுரங்களால் அலங்கரிக்கப்பட்ட தாய் சோணை நதியின் நீரைப் பாய்ச்சி நிரப்பிய ஆழ்ந்தகன்ற அகழியால் புறத்தே சூழப்பட்டதாய் விளங்கியது”.

நமது நாட்டின் வரலாற்றில் பெரும் புகழ்பெற்றிருந்த இப்பாடலி நகரின் அமைப்பி டம் பற்றிய செய்தி ஒன்று சங்க கால பேரி லக்கியங்களில் ஒன்றாகிய குறுந்தொகை யில் புதையுண்டு கிடப்பதை பேரா.வையாபுரி யார் மிகுந்த ஆய்வு மனப்பாங்குடன் அரி தின் முயன்று சான்று திரட்டி தமிழ் இலக்கி யத்தின் மேன்மையை வெளிப்படுத்தியி ருப்பது அவரது பல்துறை மேதமைக்குச் சான்றாகும். இது தவிர அந்த குறுந்தொகைப் பாடலின்  பாடபேதம் பற்றிய ஆய்வும் நடத்தி அதையும் சரிசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. “......வெண்கோட்டி யானை பசுஞ்சுனை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர்” என்பதையும் ஆய்வு செய்து, சோணை, சொணை ஆகி, அது சுனை ஆகி அதன்பின் பசுஞ்சுனை என்றான கதையையும் மிக  விளக்கமாகக் கூறி சான்றுகளுடன் மறுத்து,  சோணை படியும் என்பதை நிலைநாட்டி யிருக்கிறார். இது அவரது புலமைத் திறத்  துக்குச் சான்றாகும். இது போல் இன்னும் எத்தனை புதையல்கள் தமிழ் இலக்கியத்தில் புதைந்து கிடக்கின்றனவோ?