சென்னை, ஆக. 23- சென்னை அருகே ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட காரணத் தால் அடுத்தடுத்து விரைவு ரயில் நிறுத்தி வைக்கப் பட்டது. இதனால் ஒரு மணி நேரம் விரைவு ரயில் பாதையில் ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது ஒரு விதமான மாற்றம் உணரப் பட்டதாக விரைவு ரயில் ஓட்டுநர் ஒருவர் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை யடுத்து திருநின்றவூரில் இருந்து நெமிலிச்சேரி வரை தண்டவாளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு இடத்தில் விரி சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து புதன் கிழமை காலை 7:30 மணிக்கு போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயில் திருநின்றவூரில் நிறுத்தி வைக்கப்பட்டு, ரயில்வே தொழில்நுட்பக் குழுவினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதை யடுத்து உடனடியாக அங்கு வந்த ரயில்வே தொழில் நுட்பக் குழுவினர் விரிசலை சீர் செய்யும் பணியில் ஈடு பட்டனர். ஒரு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட பணி காரணமாக அடுத்தடுத்து 6 விரைவு ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் வழக்கம்போல் விரைவு ரயில்கள் இயக்க ப்பட்டன. அச்சப்படும் அளவிற்கு சேதம் கிடை யாது என்றும், அதிக வெப்பம் காரணமாக விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ரயில்வே துறையினர் தெரிவித்தனர். இந்த விரி சலால், வெளியூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆயிரக்கணக்கான பயணி கள் அவதிப்பட்டனர்.