மகளிர் நலன்
* மக்கள்தொகை கணக்கெடுப்பு மற் றும் கால நிர்ணயத்துடன் இணைக் காமல் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
* அனைத்து பெண்களுக்கும் திருமண மற்றும் பரம்பரை சொத்துக்களில் சம உரிமை வழங்க சட்டம் இயற்றுதல்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக் கான பராமரிப்பு தொடர்பான சட்டங் களை வலுப்படுத்துதல்; கணவனால் கைவிடப்பட்ட அனைத்து பெண் களுக்கும் பாதுகாப்பு மற்றும் போதுமான பராமரிப்பு மற்றும் மறுவாழ்வை
உறுதி செய்தல்.
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளின் கொடூரமான அதிகரிப்புக்கு காரணமானவர் களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும்,
தண்டிக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அவற்றில் பின்வருவன அடங்கும்:
* தற்போதைய திருத்தப்பட்ட சட்டத் தில் விடுபட்டுள்ள வர்மா கமிட்டி பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது; கல்வி பாடத்திட்டத்தில் பாலின சமத்துவம் தொடர்பான பாடங்களை உள்ளடக்
கிய மாற்றங்கள்; பொது இடங்களை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை; மாற்றுத்திறனாளி பெண்களுக்கு அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்பான அணுகலை உறுதி செய்தல்; தாழ்த்தப்பட்ட,
பழங்குடியின பெண்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிப் பது; வழக்குகளை சிதைத்திடும் அல்லது தாமதப்படுத்தும் காவல் துறை பணியாளர்கள் உள்ளிட்ட எந்தவொருபணியாளர்களுக்கும் அபராதம்; விரைவு நீதிமன்றங்கள் அமைத் தல்; திருமணபலாத்காரத்தை குற்றமாக்குதல்; இந்திய தண்டனைச் சட்டத்தின் தற்போதுள்ள பிரிவு 498 ஏ ஐப் பாதுகாக்க வேண்டும்; பாலியல் வன்முறை மற்றும் அமில தாக்குதல் களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவி; மறுவாழ்வு திட்டத்தின் மூலம் ஆதரவளித்தல், குறிப்பாக பாலியல் வன்முறையால் பாதிக்கப் ட்ட குழந்தைகளுக்கு; குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த போதுமான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள். பாலின நிர்ணய சோதனைகள் மற்றும் பெண் கருக் கொலைக்கு எதிரான பி.சி.பி.என்.டி.டி சட்டத்தை கண்டிப்பாக அமல் படுத்துதல்; மற்றும் செயலிழந்த கண் காணிப்பு குழுக்களை செயல்படுத்துதல்.
* பின்வரும் புதிய சட்டங்களை இயற்றுதல்: கௌரவக் குற்றங்கள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு எதிராக ஒரு தனித்துவமான சட்டம்; பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான சட்டம்; பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான சட்டத்தை வலுப்படுத்துவது, திரிபுராவில் முந்தைய இடது முன்னணி
அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது போன்ற ஒரு திட்டம் உட்பட, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவி; விதவைகள் மற்றும் பெண் தலைமையிலான குடும்பங்கள் உள்
ளிட்டு தனித்து வாழும் பெண்களுக் கான சிறப்பு திட்டங்கள்; சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கி நிறுவனங்களுக்கும் இடையே தொடர்புகளை உறுதி செய்யும் சட்டம்; தாழ்த்தப்பட்ட / பழங்குடியின மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்புச் சலுகைகளுடன் 4 சதவீதத்திற்கு மிகாமல் மானிய வட்டி விகிதங்களை உத்தரவாதப் படுத்துதல்; வீட்டுப் பணியாளர்கள் மற்
றும் வீட்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டம்; பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான விசேட திட்டங்கள்.
* பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக் கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் பெண்களைப் பற்றிய பொது கருத் துக்கள் மற்றும் சொற்பொழிவுகளில் கண்ணியமான தரங்களைக் கடைப் பிடிக்கவும், பெண்களை இழிவுபடுத் தும், அவமதிக்கும் பாலியல் ரீதியான பெண் வெறுப்பு மொழிக்கு எதிராகவும் ஒரு நடத்தை நெறிமுறையை உருவாக்குதல்.
* பாலின பட்ஜெட்டில் பெண்களுக்கானஒதுக்கீட்டை தற்போதைய 30 சதவீதத்திலிருந்து குறைந்தபட்சம் நாற் பது சதவீதமாக உயர்த்த வேண்டும்.