சென்னை, செப்.20 தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9 ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரி வித்தார். சென்னை தலைமைச் செயலகத் தில் புதனன்று (செப். 20) பேரவைத் தலைவர் மு. அப்பாவு செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடுகிறது” என்றார். பேரவை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அன்றைய தினம் (அக்.9) அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“ தமிழ் நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். அன்று 2023-2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவு தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப் படும்” என்று தெரிவித்திருக்கிறார்.