தென்காசி, செப். 21- தென்காசி மாவட்டம் சங்கரன்கோ வில் வட்டம் பெரும்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாஞ்சாங் குளத்தில் பாதிக்கப் பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பட்டியலின மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் உ. முத்துப்பாண்டியன் நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கினார் . நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உச்சிமா காளி, கணபதி, மாவட்ட குழு உறுப்பி னர்கள் நடராஜன், பாலு, சங்கரன் கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாட சாமி, மாவட்டத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, சங்கரன்கோவில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அலமேலு, விஜய குமார், சேகர்,
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக தொழிலாளர் சிஐடியு சங்கத்தின் மண்டல துணைத் தலைவர் அமல்ராஜ், அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகி பழனி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 60 நபர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான நிவா ரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்ட மக்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களிடம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், தொடர்ச்சியாக வேலை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் . அதற்கு தலைவர்கள் உங்களது கோரிக்கைகள் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் என்று கூறியதோடு தொடர்ந்து உங்கள் பக்கம் நாங்கள் இருப்போம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று கூறினர்.