இஸ்லாமாபாத்,நவ.3- பாகிஸ்தான் கிசான் ரப்தா கமிட்டி (PKRC) மற்றும் ஹக்கூக்-இ-கல்க் கட்சி (HKP) இணைந்து சர்வதேச நாணய நிதி யத்தின் அழுத்தத்திற்கு ஏற்ப பாகிஸ்தான் அரசு வளைந்து கொடுத்து விவசாயத் துறையில் கார்பரேட்களின் ஆதிக்கத்தை அதிகரிக்க உதவி வரும் போக்கை கண்டித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஜாங்கில் கடந்த அக்டோபர் மாதம் மாபெரும் மாநாடு நடத்தியுள்ளனர். இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். மாநாட்டில் உரையாற்றிய PKRC பொதுச் செயலாளர் ஃபரூக் தாரிக், விவ சாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசாங்கம் நிர்ண யம் செய்யக்கூடாது என்ற முடிவு சர்வ தேச நாணய நிதியத்தின் அழுத்தத்தின் கார ணமாகவே பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் அரசாங்கம் விவசாயி களுக்குக் கிடைக்கும் பல்வேறு வகை யான மானியங்களை ஏற்கனவே குறைத்து விட்டது. மின்சாரம்,உரங்கள் போன்ற விவ சாய உற்பத்திக்கு அத்தியாவசியமான தேவைகளுக்கான விலையையும் அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது. இத னால் பெரும்பாலான விவாசாயிகள் உற்பத்திக்கு பல மடங்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் கால நிலை மாற்றத்தின் காரண மாக கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட பெரு வெள்ளம் மழை காரணமாக பல மாநி லங்களின் விவசாய நிலங்கள் அழிவை சந்தித்துள்ளன. இது போன்ற முக்கிய கார ணங்களும், அரசாங்கத்தின் மோசமான பாரபட்சமுமே பாகிஸ்தானில் 40 சதவீதத்து க்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டு க்குக் கீழ் வாழ்வதற்கு முக்கிய காரணமா கும். இந்த மாநாட்டின் வாயிலாக அனைத்து பண்ணை விளைபொருட்களுக் கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) நிர்ணயம் மற்றும் அரசு கொள் முதலை அதிகரிக்க வேண்டும் என விவ சாயிகள் தீர்மானம் நிறைவேற்றயுள்ளனர்.