tamilnadu

img

பனங்கிழங்கு அறுவடை தீவிரம் !

பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு  உள்ளிட்ட 20 வகையான பொருட்களை தமி ழக அரசு இலவசமாக வழங்கிவருகிறது. தவிர காய்கறிகள், மஞ்சள்கொத்துக் கள், மண்பானை, கூரைப்பூ ஆகியவற்றை  மக்கள் வாங்கவேண்டும். இதற்கு குறைந் தது ரூ.250 செலவாகும். பொங்கல் பண்டி கைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள  நிலையில் “கைச்செலவுக்கு” தமிழக அரசு ஏதாவது கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். பொங்கல் விழா என்றால் பனங்கிழங்கு இல்லாமலா?  தமிழகத்தின் ‘மாநில மரம்’ பனைமரம். இது நொங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்ட சத்தான பொருட்களை மக்க ளுக்குத் தருகிறது. தவிர இதன் ஓலைகளும் வீடுகளுக்கு கூரை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இன்றளவும் பயன்பட்டு வருகிறது.  பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள விவசாயி கள் தங்கள் வயல்களில் பனங்கிழங்கு களை தோண்டி எடுக்கும் பணியில் மும்முர மாக ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி, முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், வேம்பார், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இந்தப் பகுதி விவசாயிகள் தமிழ் மாதமான ஆவணி இறுதிக்குள் பனை விதைகளை நட்டுவிடுவர். மழைக்காலம் முடிந்து, புரட்டாசி முதல் பனங்கிழங்குகள் அறு வடைக்குத் தயாராகிவிடும். தற்போது பனங்கிழங்குகளை தோண்டியெடுக்கும் தீவிர பணியில்  விவசாயிகள் ஈடுபட்டுள்ள னர். மகாராஜா என்ற விவசாயி கூறுகை யில்,  பனங்கிழங்கில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, கிழங்கு சுவையாகவும் இருக்கும்.  சீசன் காலத்தில் மக்கள் இதை அதிகளவில் வாங்கிச் செல்வார்கள். 25 பனைங்கிழங்கு கட்டு ஒன்றை  80 ரூபாய்க்கு விவசாயிகள்  விற்கின்றனர் என்றார். ஆயினும் பனை வளர்ப்பில் ஈடு பட்டுள்ளவர்கள் கடந்த பத்தாண்டுகளாக போதிய வருமானமில்லாததால்  வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.  விவசாயிகளிடமிருந்து பனங்கிழங்கு களை அரசே கொள்முதல் செய்து, தற்போது வழங்கும் பொங்கல்பரிசோடு சேர்த்து வழங்கியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் நலிவடைந்து வரும் பனைமர விவசாயத்தைப் பாதுகாக்க உதவும். இது ஏராளமான ஏழை பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பது உறுதி.