வாட்ஸ்அப் யுனிவர் சிட்டியில் ஆகா ஓகோ என எழுதப்படும் புகழுரையைக் கேட்டு வலம் வரும் அண்ணாமலை கள நிலவரம் தெரியாமல் கோவை யில் போட்டியிடுகிறார் என்பதே அரசியல் நோக்கர்களின் பேசு பொரு ளாக இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக கோவையில் அண்ணாமலை போட்டியிடுகிறார் என ஊடகங் கள் வழியாக பாஜக பேசி வந்தது, இப்போது உறுதி செய்யப்பட்டுள் ளது. இதுகுறித்து விசாரித்ததில், பாஜகவினர் மைன்ட்செட்டில் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என்பதை பதிவு செய்து விட்டால், கடைசி நேரத்தில் ‘கரூர்காரர்’ இங்கே எப்படி போட்டி யிடலாம் என கோவையில் உள்ள உள்ளூர் பாஜகவினர் உள்ளடி வேலை பார்க்க மாட்டார்கள் என்ப தற்காகத்தான் ஊடகங்களின் வாய் அண்ணாமலையை முன்மொழிந்து கொண்டிருந்தது எனத் தெரிய வருகிறது. இப்படி கோவையில் வலிய அண்ணாமலையை திணித்த பின்னர் உள்ளூர் பாஜகவினர் உற்சாகம டைந்துள்ளனரா என கேட்டால், இல்லை என்பதுதான் இப்போதை க்கு நிலவரம். விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு என ஊடகங்கள் லைவ் அடித்துக்கொண்டிருந்தனர். அங்கு பேசிய அண்ணாமலை ‘எனக்கு தேசிய அரசியலில் விருப்பமில்லை; தலைமை வற்புறுத்தியதால் வேறு வழியின்றி போட்டியிடுகிறேன்’ என வேட்பாளராக அறிவித்த முதல் ஊடக சந்திப்பிலேயே தனது தோல்விக்கான காரணத்தை பின்னர் சொல்வதற்கு ஏதுவாக இந்த பதிலை கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
ஊடகங்களின் லைவ்ய முடிந்த வுடன், சித்தாபுதூரில் உள்ள கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்திற்கு அண்ணாமலை சென்றபோது, அலுவலகத்தின் கதவை பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகி விட்டனர் உள்ளூர் பாஜக நிர்வாகி கள். வேறு வழியின்றி நான்கைந்து பேருடன் அங்குள்ள ஐயப்பன் கோ விலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதுவும் “நீ நடிகன்டா” என்கிற வகையில், உள்ளூர் ஐயப்ப பக்தர்களே சட்டை போட்டுக்கொண்டு சாமி தரிசனம் செய்யும் நிலையில், சட்டையை கழற்றிவிட்டு, துண்டை போர்த்திக் கொண்டதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ‘மோடிக்கே வித்தைய கத்துக்கொடுப்பான் போல மகா நடிகன்’ என்கிற பெயரோடு வெளியே வந்தார். வாட் நெக்ஸ்ட் என அண்ணா மலை கேள்வி எழுப்ப, இன்று ஜிடி நாயுடு நினைவு நாள் என்று யாரோ சொல்ல, அடுத்து ஜிடி.நாயுடு வின் மியூசியம் சென்று கைகட்டி ஷோ காட்டிவிட்டு நகர்ந்தார். இதனைக் கண்ட காவலாளியோ, “வருசா வருசம் ஜிடி.நாயுடு பிறந்நாள், நினைவு நாள் எல்லாம் வருது; ஒருத்தரும் இங்க எட்டிப் பார்த்ததே இல்லை. இப்போ படை யெடுக்கிறாங்க, எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு” என மற்றொரு காவ லாளியிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுதான் ஹைலைட்.
ஓரிரு நாட்களில் இவ்வளவு அலப்பறைகளும் நடக்க, என்ன தாங்க நடக்குது பாஜகவில் என உள்ளூர் பாஜக பிரமுகரிடம் கேட்ட போது, “அவர் ஐபிஎஸ் படிச்சவ ருதாங்க, எங்க கட்சி மாநில தலை வர்தாங்க..அதை நாங்க மறுக்க வில்லை. ஆனா,எம்பி., சீட்டுக்கு நிற்க உள்ளூரில் ஆளில்லையா, என்ன? வருசம் முழுசும் நாங்க கஷ்டப்பட்டு உழைப்போம், கேசு வாங்குவோம், இதுக்கெல்லாம் நாங்க வேணும், தேர்தலில் நிற்க வைக்க மட்டும் வெளியூர்ல இருந்து ஆள கொண்டு வருவாங்களா? பல்ல டம் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குள்ளதான் வருது. அந்த பகுதியைச் சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணனுக்கே பஞ்சாமிர்தம் பார்சல் கொடுத்தவங்க நாங்க. கட்சி தலைமை அலுவலகத்தில் உட் கார்ந்து கொண்டு மூனு நாள் உள்ளி ருப்பு போராட்டம் நடத்தினோம். இவரு கரூரில் இருந்து வந்து இருக் காரு, எங்கள மீறி எப்படி ஓட்டு வாங்குறாருன்னு பார்க்கிறோம். ஒரு பைசா கூட செலவு பண்ண மாட்டேன் என்று பேட்டி கொடுக்கி றார். தலைமை கொடுக்கிற மொத்த காசையும் ஆட்டைய போடுறதுக்கு இப்பவே பிளான் பன்னுற மாதிரி இருக்கு. எங்க பலம் என்னான்னு எங்களுக்கு தெரியுமுங்க. கடந்த முறை அதிமுகவோடு கூட்டணி அமைச்சு நின்னே இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்துல சி.பி.ஆர் தோத்தாரு. அதுவும் எஸ்.பி.வேலு மணி வீதிவீதியா வந்து தாமரை க்கு ஓட்டுக்கேட்டே அதுதான் லட்சணம். இப்போ வேலுமணிக்கு, அண்ணாமலையை சுத்தமா பிடிக்காது. மத்த தொகுதியில் அதிமுக செய்யுற அட்ஜெஸ்மென்ட் இங்க வேலுமணி செய்ய விட மாட்டார். அதுபோக இங்கே கூட்ட ணியில் இருக்கிற பாமக, அமுமுக, ஐஜேகே, ஜான்பாண்டியன் கட்சி இந்த கட்சி எல்லாம் கோவையில் எங்க இருக்கு? அந்த கட்சியின் கொடியவே நாங்கதான் இருக்கிற நாலு பேரும் மாத்தி மாத்தி தூக்கனும்ங்கிற நிலை. இவ்வளவு பிரச்சனை இங்க இருக்கிறபோதே வெளியூர்க்காரருக்கு சீட் கொடுப் பார்கள் என்றால், எங்க உணர்வ தேசிய தலைமை எப்போ புரிஞ்சுக் குதோ அப்ப நாங்க வேலை செய்றோம்” என்று பொருமித் தள்ளினார்.
அண்ணாமலைக்கு உள்ளூர் பாஜகவினர் ஆப்பை ஆணியில் தீட்டிக்கொண்டிருக்கிற இதே வேளையில்தான், ஐபிஎஸ் படித்தவர், பண்பாளர் என்கிற பாஜக வினரின் முழக்கத்தை கேட்டுவிட்டு, எழுத்தாளர் இரா.முருகவேல், “இந்த தகர சீட்டுல கத்திய தேய்க்கிற சத்தம் இன்னும் ஒரு மாசத்துக்கு முழுசா கேட்கனும்னு நினைக்கும் போதே காது கூசுதுன்னு” முக நூலில் போட்டிருக்கும் பதிவிற்கு லைக் அள்ளுகிறது.
அ.ர.பாபு